12.31.2012

கூட்டுக் குடும்பத்துக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு...!

கூட்டுக் குடும்பத்துக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு...!

12.30.2012

இப்படியும் தனிக்குடித்தனம் போவார்களா..?

எமா ஓபராக் என்ற 58 வயதான பெண் ஒருவர் நகர வாழ்க்கையை வெறுத்து யாருமற்ற காட்டுப்பகுதியில் தனியாக ஒரு குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றார்.
கடந்த 13 வருடங்களாக மின்சாரவசதிகள் எதுவுமின்றி இங்கு வாழ்ந்து வந்த எமா தற்போது சுயமாகவே மின்சாரத்தேவை மற்றும் உணவுத்தேவைகளை பூர்த்திசெய்யும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். இதற்கிடையில் இவர் ஒரு ஒக்போர்ட் பல்கலைக்கழகபட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.








இவருக்கு தமிழ் பேசினா tongue roll ஆவுதாம்...

இவருக்கு தமிழ் பேசினா tongue roll ஆவுதாம்...

11.21.2012

முஸ்லிம்களை மோசமாக சித்தரிக்கும் விஸ்வரூபம்! சர்ச்சையில் சிக்கியுள்ள கமல் வைத்தியசாலையில் அனுமதி

முஸ்லிம் சமூகத்தை மோசமாக சித்தரிக்கும் ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளால் கமலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுப்புது தொழில் நுட்பங்களோடு விஸ்வரூபம் படத்தை இயக்கி, தயாரித்துள்ள கமல், அதனை வெளியிடுவதில் சிக்கலை எதிர் கொண்டுள்ளார்.
தலிபான் போராளிககளும் தலிபான்- அமெரிக்காவுக்கு இடையே நடந்த ஆப்கான் போரும் கதையின் மையமாகியிருப்பதால் முஸ்லிம்களை கமல் மோசமானவர்களாக சித்தரித்திருக்கிறார் – அவரது இப்படத்தில் இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இஸ்லாமிய அறிஞர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் “விஸ்வரூபம்´ படத்தை போட்டுக் காட்ட வேண்டும். அதில் ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பது தெரிய வந்தால் அதை நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தினால் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலால் கமலுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

ஆனால் அது வதந்தி என்றும் கமல் மிகுந்த ஆரோக்கியத்துடன் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தின் பிரிமியர் ஷோவை அமெரிக்காவில் வெளியிடும் வேலைகளிலும் ஹாலிவுட்டில் படம் பண்ணுவது பற்றிய முன்னோட்டத்திலும் பிஸியாக இருப்பதாகவும் கமல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




வினோத நோயினால் தொடர்ந்து இரண்டு மாதங்களாக தூங்கும் இளம்பெண்..!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் நிக்கோல் டெலீன் (17) என்ற இளம்பெண் தொடர்ந்து 64 நாட்கள் தூங்குகிறார். இவர் கெலீன்-லெவீன் சிண்ட்ரோம் அல்லது ஸ்லீப்பிங் பியூட்டி சிண்ட்ரோம் என்ற தூக்க கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் சிறுவயதில் இருக்கும் போதே இவர் ஒரு நாளைக்கு 19 மணிநேரம் வரை தூங்குவாள் என்று அவரது தாய் கூறுகிறார்.
இதுகுறித்து நிக்கோல் கூறுகையில், இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் என்னால் எந்த ஒரு திருவிழாவும் கொண்டாட முடியாமல் போகின்றது என்று மிகவும் வருதத்ததுடன் கூறுகிறார்.
 
 




மில்லியன் கணக்கில் ரசிகர்களாம் இந்த நாய்க்குட்டிக்கு....!

 உலகில் மிக அழகான நாய்க்குட்டியான 'Poo' மில்லியன் கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ளது.








இரயில் சிக்கி சின்னாபின்னமாகும் மனிதனின் கொடூரக் காட்சி !

இரயில் சிக்கி சின்னாபின்னமாகும் மனிதனின் கொடூரக் காட்சி .... (இதயம் பலவீனமானவர்கள் பார்க்கத் தடை)

மஞ்சள் கலர் தாலி பிடிக்காமல் திருமணத்தை நிறுத்திய விசித்திர மணப்பெண்.!

வரதட்சணைக்காக திருமணம் தடைபடுவது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஈரோடு அருகே திருமண வீட்டில் தாலிக்கயிற்றின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக காரணம் கூறி மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
ஈரோடு பெரியவலசுவை கல்லூரி மாணவிக்கும் திருச்செங்கோடு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. நேற்று மணநாள் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்டபத்தில் குவிந்தனர்.
முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்டும் நேரத்தில் அதை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். இதனால் மாப்பிள்ளையும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கு மணப்பெண் கூறிய காரணம்தான் அங்கே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘தாலிக்கொடி மஞ்சள் நிறத்தில் உள்ளது.
இந்த நிறம் எனக்கு ராசி இல்லை.அதனால் திருமணம் செய்ய விருப்பமில்லை’ என்று கூறிவிட்டு நடையை கட்டினார்.
மணமகளின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டாரை சமாதானம் செய்து தங்கையை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
ஆனால் மணமகளின் தங்கையும் மறுத்துவிட்டார். உடனடியாக மற்றொரு உறவினர் பெண்ணை தேடி, திருமணம் நடந்தது.
காதலருக்காக காத்திருக்கிறேன்.
திருமணத்துக்கு மறுத்த பெண்ணிடம் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் ஒருவரை ஒருதலைப்பட்சமாக காதலிப்பதாகவும் அவருக்காக காத்திருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து மகளிர் போலீசார் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மஞ்சளுக்கு பெயர் போன ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் கலர் தாலி பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

பெண்களே!.. இதைப் பார்த்தாவது பசங்கள புரிந்து கொள்ளுங்க!...

இதைப் பார்த்தாவது பசங்கள புரிந்து கொள்ளுங்க!

8.09.2012

நடிகைகளுக்கு குடி பழக்கம் இருப்பது உண்மை: சனாகான்

சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சனாகான். இவர் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சனாகான் சமீபத்தில் இந்தி நடிகைகளைவிட தென்னிந்திய நடிகைகள் மது, சிகரெட் பழக்கத்துக்கு அதிகமாக அடிமையாகி உள்ளனர் என்று பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

மும்பை நட்சத்திர ஓட்டல்களில் தென்னிந்திய நடிகைகள் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு தள்ளாடிப் போவதை பார்த்து இருக்கிறேன். எனக்கு அதுபோன்ற பழக்கம் எதுவும் கிடையாது, என்றும் கூறியிருந்தார்.

சனாவின் இந்த பேட்டிக்கு நடிகைகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சனா கானை கண்டித்து பேட்டியளித்தனர். எச்சரிக்கையும் விடுத்தார்கள்.

இந்நிலையில் சனாகான் மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தி பேட்டியளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், நான் தவறாக எதையும் பேசிவிடவில்லை. மது, புகை பழக்கம் உள்ள நடிகைகள் பற்றிய உண்மையைதான் சொன்னேன்.

இன்றும் நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் மது கிளாசை கையில் வைத்திருப்பது போன்ற படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த பழக்கத்தை அவர்கள் விட்டு விடாமல் மாறாக என் மீது பாய்வது முறையல்ல என்றும் நடிகைகள் பற்றி நான் சொன்ன கருத்தில் இருந்து ஒருபோதும் மாறமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.