
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று சென்னை வந்தார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் மேலும் ஓர் எண்ணெய்க் கிணறை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. ÷சிபி10ஏ-என்1 என்ற பகுதியில் ஹைட்ரோகார்பன் படிமங்கள் இருப்பதாக நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.÷இந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து நாளொன்றுக்கு 410 பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதியில் மொத்தம் 17 இடங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் அகழ்வுப் பணியை மேற்கொண்டுள்ளது. அதில் 6 கிணற்றில் மட்டுமே எண்ணெய் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது மேலும் ஒரு எண்ணெய்க் கிணறு கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இந்த எண்ணெய்க் கிணறுக்கு திருபாய்-50 என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 7 எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், எவ்வளவு எண்ணெய் கிடைக்கும் என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.÷இந்த எண்ணெய்க் கிணறு குறித்த அறிவிப்பை அரசுக்கும் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகத்திடமும் தெரிவித்து விட்டதாகவும் நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ÷சிபி-ஓஎன்என்-2003 எண்ணெய்க் கிணறு ஆமதாபாதிலிருந்து 130 கி.மீ. தொலைவில் காம்பே வளைகுடாவில் அமைந்துள்ளது. இரு பகுதிகளைக் கொண்ட இந்த பகுதியின் மொத்த பரப்பு 635 சதுர கிலோமீட்டராகும். இந்தப் பகுதி முழுவதிலும் எண்ணெய் அகழ்வுப் பணிக்கான முதலீட்டை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீúஸ செய்துள்ளது. அரசின் புதிய எண்ணெய் அகழ்வு கொள்கையின்படி (என்இஎல்பி) நடத்தப்பட்ட ஏலத்தில் இந்தப் பகுதிக்கான லைசென்ûஸ இந்நிறுவனம் பெற்றது.÷இந்தப் பகுதி முழுவதும் 2-டி செஸிமிக் முறையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 80 சதவீத பகுதியில் 3-டி செஸிமிக் முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 17 எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டன. இதில் 13 கிணறுகள் முதல் பகுதியில் அமைந்துள்ளன. ÷கடந்த 11-ம் தேதி 6-வது எண்ணெய்க் கிணறு அகழ்வு குறித்த தகவலை ரிலையன்ஸ் வெளியிட்டது. தற்போது 7-வது எண்ணெய்க் கிணறு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும், ஆங்கில மொழியாக்க தொழில்நுட்பத்தை செயல்படுத்த உத்தரவிடவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு விமானப் படையில் குரூப் கேப்டன் என்கிற கௌரவ பதவி வழங்கப்படவுள்ளது.இதுகுறித்து விமானப் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சாதனையாளர்களுக்கு இந்திய ராணுவத்தின் முப்படைகளில் கெüரவ பதவிகளை வழங்குவது வழக்கம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோருக்கு இத்தகைய கெüரவப் பதவிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் சச்சினுக்கு விமானப்படையில் குரூப் கேப்டன் பதவி அளித்து கெüரவிக்கப்படவுள்ளது. கிரிக்கெட்டில் சச்சின் படைத்துள்ள சாதனைகளை கெüரவிக்கும் விதமாக இந்த பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளது.சச்சினுக்கு விமானப் படையில் கெüரவ பதவி அளிப்பதன்மூலம், படையில் சேர்வதற்கு இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சச்சினுக்கு குரூப் கேப்டன் பதவியை அளிப்பதற்கான ஏற்பாடுகளை விமானப் படை செய்து முடித்துள்ளது. குடியரசுத் தலைவரும், பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த கெüரவப் பதவி சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்படும்.சச்சின் பெருமிதம்: குரூப் கேப்டன் கெüரவப் பதவி தனக்கு வழங்கப்படவுள்ளது பெருமிதம் அளிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.லண்டனிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்த கெüரவம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விமானப் படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளது இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கிறது.இந்திய விமானப் படையின் விளம்பரத் தூதராக பணியாற்றவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கெüரவத்துக்காக மீண்டும் ஒரு முறை வணங்குகிறேன் என்றார் அவர்.
கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. தமிழுக்கு நல்ல செறிவான தொன்மையான இலக்கியமும், இலக்கண பாரம்பரியமும், தனக்கென தனி எழுத்து கட்டமைப்பும், எந்த இடைவெளியும் இல்லாத தொடர்ந்த செழுமையான வளர்ச்சியும் கொண்டது தமிழ் மொழி. தமிழ்நாட்டில் முதன்மையாகவும், மற்ற நாடுகளிலும் தொடர்ந்து கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் பேசப்பட்டு வளர்ந்து வருகிறது. தமிழ் மொழி இக்காலத்திற்கேற்ப தன்னை வளர்த்துக் கொண்டாலும், அதன் தொன்மைத் தன்மையும், மொழி அம்சங்களும் மாறாமல் கட்டிக் காக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நிர்வாகம் வேறு மொழிகளைச் செம்மொழிகளாக அறிவித்து, அவற்றின் வளர்ச்சிக்கு சிறப்பான உதவிகளைச் செய்து வந்தது. இதன் அடிப்படையில் தூண்டப்பட்டு தமிழ் நாட்டிலிருந்தும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கேட்கப்பட்டு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. வெளிநாட்டில் வாழும் தமிழ் அறிஞர்களும் இந்த வேண்டுகோளினை ஆய்வுப் பூர்வமான ஆதாரத்துடன் பரிந்துரைத்து கேட்டு வந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜார்ஜ் எல் ஹார்ட் என்னும் தமிழ் அறிஞராவார். 2000 ஆம் ஆண்டில் இது குறித்து எழுதியபோது, அப்போது செம்மொழிகள் என உலகம் எங்கும் பேசப்பட்டு வந்த பெர்சியன், சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன், சீனம் மற்றும் அரபி மொழிகளுக்கு ஈடாகவும் இணையாகவும் தொன்மையையும், இலக்கண இலக்கியத்தையும் தமிழ் கொண்டிருப்பதனாலேயே, இதற்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை வலியுறுத்தினார்.
இவருக்கு முன் இதே கருத்தினை கால்டுவெல் (1814-1891) பரிதிமாற் கலைஞர் வி.ஜி. சூர்யநாராயண சாஸ்திரி, மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோரும் வலியுறுத்திப் போராடி வந்தனர்.
இயக்கமாக சைவ சித்தாந்த சமாஜம் 1918ல் இந்த கோரிக்கையை வைத்தது. பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கரந்தை தமிழ்ச் சங்கம் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு இதே வேண்டுகோளை வைத்தது.
பின்னர் 1996 ஆம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டுமென்று கேட்டு தீர்மானம் இயற்றப்பட்டது. இதுவே 1996 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்தது. விழுப்புரத்தில் பின்னர் 2004ல் நடந்த மாநாட்டிலும் இதே தீர்மானம் வலியுறுத்தப்பட்டது.
பின் 2004ல் நடைபெற்ற பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதியாய் இருந்த தமிழர் அப்துல் கலாம், தமிழ் ஒரு செம்மொழி என அறிவித்தார். 2004 செப்டம்பரில், செம்மொழி அந்தஸ்து ஒரு மொழிக்கு வழங்கத் தேவையான அம்சங்களை மத்திய அரசின் குழு வரையறை செய்தது. பின் 2004 அக்டோபர் 12ல் இந்திய அரசு தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கி அறிவிப்பு வெளியிட்டது. சுதந்திர, இந்திய மக்கள் அரசில் முதல் செம்மொழி அறிவிப்பு பெற்ற மொழி தமிழ் மொழியே. நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்களால் வேண்டப்பட்ட ஒரு கனவு இதன் மூலம் நிறைவேறியது.
கிரேக்கம், லத்தின் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் செம்மொழிகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் மக்களால் பேசப்பட்டு உயிருடன் வாழும் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழி தமிழ் மொழி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
புதிதாக திருமணமான தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. அதிலும் பிரிந்திருக்கும் தம்பதிகள் சந்தித்துக் கொள்ளும் போது முத்தம் கொடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்தியாவில் காதல் கொண்ட நெஞ்சங்கள் குற்றம் புரிந்ததாக, உறவுக்காரர்கள் கொலை செய்யும் எண்ணம் சமீபத்தில் அதிகரித்துள்ளதாக சுப்ரீம்கோர்ட் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து இதனை தடுப்பதில் என்ன சிரமம், ஏன் இது போன்ற சம்பவம் நடக்கிறது, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? என விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் அரியானா பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கிராமத்தினர் கண்எதிரே கொடூரம் : சமீபத்தில் அரியானா மாநிலத்தில் நிமிரிவாலி அருகே பிவானி என்ற கிராமத்தில் காதல் செய்தற்காக காதலன் , காதலிகள் பஞ்சாயத்து மூலம் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் .அரியானாவில் நடந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு: மோனிகா ( 18 ), ரிங்கு (19), மனம்ஒத்து காதல் செய்திருக்கின்றனர். இதனைக்கேள்விப்பட்ட மோனிகாவின் தந்தை, சகோதரன், மாமன், சேர்ந்து காதலன், காதலியை கொடுமைப்படுத்தினர். பின்னர் இருவரையும் அடித்தே கொன்றிருக்கின்றனர். காதலனை தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்கள். இது இந்த கிராம மக்கள் சிலர் பார்க்கும் அளவிற்கு அவர்கள் முன்னிலையில் கொன்றிருக்கின்றனர். யாராவது காதலித்தால் இவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் என கிராமத்தினரை எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்ட 4 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காதலன் ரிங்குவின் மாமனார் கிருஷ்ண குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் பிரேம்சிங் தெரிவித்தார். இவர் மேலும் கூறுகையில்; இருவரது உடல்களிலும் உள்ள காயத்தின் அடிப்படையில் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் . இன்னும் பிரேத பரிசோதனை வந்த பின்னர் முழு விவரம் தெரிந்து விடும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்றார்.
இது போன்று பஞ்சாப், அரியானா, மேற்குவங்கம் . ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் காதல் கொடுமை சம்பவம் நடந்துள்ளதாகவும் , இது போன்ற கொடூரச்செயல்களை தடுக்க உரிய சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சக்திவாஹினி என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் தொடுத்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் காதலன், காதலிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைள் குறித்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றார். இளைய மகள் பிரபா இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றார். சென்னை அயனாவரம் பெத்தேல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்ற வித்யாராணி 1,200க்கு 730 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.