6.20.2010

அ‌‌ஜீத் கார் பந்தயத்தில் இருந்து சினிமாவுக்கு திருப்பினார்

பார்முலா 2 கார் பந்தயத்தில் கலந்து கொண்ட அ‌‌ஜீத் அடுத்தடுத்தப் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் தனது திரைப்பட வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.

அ‌‌ஜீத்தின் ரேஸ் மோகம் அனைவரும் அறிந்தது. சில காலம் ரேஸிலிருந்து ஒதுங்கியிருந்தவர் மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.

நீண்ட நாட்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளாதது, அதிகபடியான உடல் எடை ஆகியவை காரணமாக 22 பேர் கலந்து கொண்ட போட்டியில் அ‌‌ஜீத்தால் 18வது இடத்தையே அதிகபட்சமாக பிடிக்க முடிந்தது. விபத்தில் சிக்கிய கசப்பான நிகழ்வும் நடந்தேறியது.

ரேஸில் கௌரவமான ஒரு இடத்தைப் பிடிக்க தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதாலும், நலம் விரும்பிகளின் விருப்பத்தின் பே‌ரிலும் தொடர்ந்து ரேஸில் கலந்து கொள்ளும் முடிவை வாபஸ் பெற்றிருக்கிறார் அ‌‌ஜீத்.

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கும் படத்தில் நடிக்க தற்போது தன்னை தயார்படுத்தி வருகிறார் அ‌‌ஜீத்.

0 comments:

Post a Comment