7.01.2010

அழுகாமல் ஒரு வாரத்துக்கு மேல் தாங்கக்கூடிய தக்காளி: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

அதிக நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடிய புதிய தக்காளி இனத்தை அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சாதாரண தக்காளி இனத்தில், ஈஸ்ட் எனப்படும் பூஞ்சையின் ஜீனைக் கலப்பினம் செய்து அவர்கள் இந்தச் சாதனையை புரிந்துள்ளனர்.

இதன்மூலம், நாம் அன்றாடம் உபயோகிக்கும் தக்காளியை விட ஒருவார காலத்துக்கும் மேல் இந்த வகை தக்காளிகள் கெடாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அவதார் ஹன்டா தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

இது குறித்து ஹன்டா கூறியிருப்பதாவது:

பல்வேறு உணவுப் பொருள்களின் கெட்டுப் போகும் தன்மையைக் குறைத்து, நீண்ட நாள்கள் சேமித்து வைக்க இந்த கண்டுபிடிப்பு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். கடைகளில் தக்காளியை சேமித்து வைத்து விற்பனை செய்பவர்களுக்கு இது நல்லதொரு பயனாக அமையும் என ஹன்டா தெரிவித்துள்ளதாக தாவரவியல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment