7.03.2010

கணவன் - மனைவி பரஸ்பரம் துரோகமிழைத்தால் சிறை : பிரான்சில் சட்டம்

கணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது.

அதன்படி கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டால் இது குற்றமாகக் கருதப்படும்.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதமும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

சமீப காலமாக பிரான்ஸ்சில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment