Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts

12.31.2012

கூட்டுக் குடும்பத்துக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு...!

கூட்டுக் குடும்பத்துக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு...!

12.30.2012

இப்படியும் தனிக்குடித்தனம் போவார்களா..?

எமா ஓபராக் என்ற 58 வயதான பெண் ஒருவர் நகர வாழ்க்கையை வெறுத்து யாருமற்ற காட்டுப்பகுதியில் தனியாக ஒரு குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றார்.
கடந்த 13 வருடங்களாக மின்சாரவசதிகள் எதுவுமின்றி இங்கு வாழ்ந்து வந்த எமா தற்போது சுயமாகவே மின்சாரத்தேவை மற்றும் உணவுத்தேவைகளை பூர்த்திசெய்யும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். இதற்கிடையில் இவர் ஒரு ஒக்போர்ட் பல்கலைக்கழகபட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.








இவருக்கு தமிழ் பேசினா tongue roll ஆவுதாம்...

இவருக்கு தமிழ் பேசினா tongue roll ஆவுதாம்...

11.21.2012

முஸ்லிம்களை மோசமாக சித்தரிக்கும் விஸ்வரூபம்! சர்ச்சையில் சிக்கியுள்ள கமல் வைத்தியசாலையில் அனுமதி

முஸ்லிம் சமூகத்தை மோசமாக சித்தரிக்கும் ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளால் கமலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுப்புது தொழில் நுட்பங்களோடு விஸ்வரூபம் படத்தை இயக்கி, தயாரித்துள்ள கமல், அதனை வெளியிடுவதில் சிக்கலை எதிர் கொண்டுள்ளார்.
தலிபான் போராளிககளும் தலிபான்- அமெரிக்காவுக்கு இடையே நடந்த ஆப்கான் போரும் கதையின் மையமாகியிருப்பதால் முஸ்லிம்களை கமல் மோசமானவர்களாக சித்தரித்திருக்கிறார் – அவரது இப்படத்தில் இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இஸ்லாமிய அறிஞர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் “விஸ்வரூபம்´ படத்தை போட்டுக் காட்ட வேண்டும். அதில் ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பது தெரிய வந்தால் அதை நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தினால் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலால் கமலுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

ஆனால் அது வதந்தி என்றும் கமல் மிகுந்த ஆரோக்கியத்துடன் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தின் பிரிமியர் ஷோவை அமெரிக்காவில் வெளியிடும் வேலைகளிலும் ஹாலிவுட்டில் படம் பண்ணுவது பற்றிய முன்னோட்டத்திலும் பிஸியாக இருப்பதாகவும் கமல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




வினோத நோயினால் தொடர்ந்து இரண்டு மாதங்களாக தூங்கும் இளம்பெண்..!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் நிக்கோல் டெலீன் (17) என்ற இளம்பெண் தொடர்ந்து 64 நாட்கள் தூங்குகிறார். இவர் கெலீன்-லெவீன் சிண்ட்ரோம் அல்லது ஸ்லீப்பிங் பியூட்டி சிண்ட்ரோம் என்ற தூக்க கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் சிறுவயதில் இருக்கும் போதே இவர் ஒரு நாளைக்கு 19 மணிநேரம் வரை தூங்குவாள் என்று அவரது தாய் கூறுகிறார்.
இதுகுறித்து நிக்கோல் கூறுகையில், இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் என்னால் எந்த ஒரு திருவிழாவும் கொண்டாட முடியாமல் போகின்றது என்று மிகவும் வருதத்ததுடன் கூறுகிறார்.
 
 




மில்லியன் கணக்கில் ரசிகர்களாம் இந்த நாய்க்குட்டிக்கு....!

 உலகில் மிக அழகான நாய்க்குட்டியான 'Poo' மில்லியன் கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ளது.








இரயில் சிக்கி சின்னாபின்னமாகும் மனிதனின் கொடூரக் காட்சி !

இரயில் சிக்கி சின்னாபின்னமாகும் மனிதனின் கொடூரக் காட்சி .... (இதயம் பலவீனமானவர்கள் பார்க்கத் தடை)

மஞ்சள் கலர் தாலி பிடிக்காமல் திருமணத்தை நிறுத்திய விசித்திர மணப்பெண்.!

வரதட்சணைக்காக திருமணம் தடைபடுவது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஈரோடு அருகே திருமண வீட்டில் தாலிக்கயிற்றின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக காரணம் கூறி மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
ஈரோடு பெரியவலசுவை கல்லூரி மாணவிக்கும் திருச்செங்கோடு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. நேற்று மணநாள் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்டபத்தில் குவிந்தனர்.
முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்டும் நேரத்தில் அதை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். இதனால் மாப்பிள்ளையும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கு மணப்பெண் கூறிய காரணம்தான் அங்கே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘தாலிக்கொடி மஞ்சள் நிறத்தில் உள்ளது.
இந்த நிறம் எனக்கு ராசி இல்லை.அதனால் திருமணம் செய்ய விருப்பமில்லை’ என்று கூறிவிட்டு நடையை கட்டினார்.
மணமகளின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டாரை சமாதானம் செய்து தங்கையை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
ஆனால் மணமகளின் தங்கையும் மறுத்துவிட்டார். உடனடியாக மற்றொரு உறவினர் பெண்ணை தேடி, திருமணம் நடந்தது.
காதலருக்காக காத்திருக்கிறேன்.
திருமணத்துக்கு மறுத்த பெண்ணிடம் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் ஒருவரை ஒருதலைப்பட்சமாக காதலிப்பதாகவும் அவருக்காக காத்திருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து மகளிர் போலீசார் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மஞ்சளுக்கு பெயர் போன ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் கலர் தாலி பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

பெண்களே!.. இதைப் பார்த்தாவது பசங்கள புரிந்து கொள்ளுங்க!...

இதைப் பார்த்தாவது பசங்கள புரிந்து கொள்ளுங்க!

11.21.2010

தூங்குவது எப்படி?

நிம்மதியாக தூங்குவது எப்படி?ன்னு புத்தகம் எழுதினீங்களே, புத்தக விற்பனை எப்படி?

வியாபாரம் படுத்துடுச்சு! எ‌ன் தூ‌க்கமே போ‌ச்சு..

8.20.2010

படித்துச் சுவைக்க வேண்டிய நல்ல தகவல்கள்!

எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான்.

ஆசை

கடினமாக உழைப்பதற்குரிய முயற்சியை ஒருவர் எப்போது உத்வேகப்படுத்துகிறார்? ஒரே ஒரு வார்த்தையில் இதற்கு பதிலைச் சொல்லிவிடலாம் – “ஆசை”.

நாயை பற்றிய ஒரு கதை. ஒரு நாய் தன்னால் மிகவும் வேகமாக ஓட முடியும் என்று எப்போது பார்த்தாலும் பெருமை பேசிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முயலை துரத்திக் கொண்டு ஓடிய அந்த நாயால் முயலைப் பிடிக்க முடியவில்லை. மற்ற நாய்கள் அதைப்பார்த்து கேலி செய்தன. ஆனால் அந்த நாய் இவ்வாறு சொல்லியது…..

“ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். முயல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது. ஆனால் நான் வேடிக்கைக்காகத்தான் அதை விரட்டிக் கொண்டு ஓடினேன்”. முயலைப் பிடிப்பது எனக்கு ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவில்லை.

ஆனால் முயலைப் பொறுத்தவரையில் இது வாழ்வா! சாவா!! என்றதொரு போராட்டம். நாயை விட கடுமையாக முயற்சித்தது. வாழ்க்கை அதற்கு மிகவும் முக்கியமான விஷயம். ஒரே வார்த்தையில் மிகவும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம் வாழ வேண்டும் என்றதொரு “ஆசை”.

மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான வில்லியம் ஜேம்ஸ் இதனை கீழ்கண்டவாறு கூறுகிறார். “விளைவைப் பற்றி நீங்கள் போதுமான அக்கறை காட்டினால் அநேகமாக நிச்சயமாக நீங்கள் அதைப் பெற்று விடுவீர்கள். நல்லவராக இருக்க விரும்பினால் நல்லவராக இருப்பீர்கள். நீங்கள் அடைய வேண்டிய விஷயங்களை உண்மையாகவே அடைய ஆசைப்பட வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியம்”.

“ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்”.

நீங்கள் விரும்புவதை அடைவதற்கு ஒரு இரகசியம் இருக்கிறது:

நீங்கள் போதுமான அக்கறைகாட்ட வேண்டும்

மெய்யாகவே விரும்ப வேண்டும்

ஆசை இருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனதில் இந்த ஆசை கொழுந்துவிட்டு எரிய வேண்டும் உங்கள் எண்ணங்களின் மீதும் செயல்களின் மீதும் அதற்குப் பெரிய பாதிப்பு இருக்க வேண்டும்
மேலும் அதை அடைந்தே தீர வேண்டும் என்பது உங்கள் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற வேண்டும்
அந்த அளவுக்கு அது உங்களுக்கு உங்களது வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

“அத்தனைக்கும் ஆசைப்படு – ரஜனீஷ்(ஓஷோ)”

—————————————————————

கடின உழைப்பு

எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் அதிகமாகக் கவலைப்பட்ட போது அவனுடைய அதைரியமும் அதிகமாயிற்று. முடிவில் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தான்.

தன்னுடைய இந்த முடிவு தன்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியக்கூடாது என்று அவன் விரும்பினான். கட்டடத்தைச் சுற்றி சுற்றி ஓடி இயற்கையான மாரடைப்பை உண்டாக்கி மரணம் அடைய வேண்டும் என்று எண்ணினான்.

ஆகவே ஓட ஆரம்பித்தான். ஓடிக் கொண்டே இருந்தான். அதிகமாக ஓட ஓட அவனுடைய களைப்பும் அதிகமாயிற்று. களைப்பு மிகுதியாகவே களைப்பைத் தவிர வேறு எதையும் அவனால் உணர முடியிவில்லை. படுக்கைக்குச் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் அவனால் எண்ண முடிந்தது. படுக்கையில் படுத்து உறங்கிப் போனான். பன்னிரண்டு மணி நேரம் கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கழித்தான். எழுந்த போது புத்துணர்ச்சியுடன் இருந்தான். எந்தப் பிரச்சனையும் சந்திக்க முடியும் என்கிற ஆர்வம் தன்னுள் தோன்றி இருப்பதையும் உணர்ந்தான்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல் வரிகளில் ஒன்று

“வேலையற்ற வீணர்களின் மூலையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே”!!!

——————————————————

சுதந்திரம்

உலக நாடுகளில் விடுதலைப் போர் நடத்திய எல்லாத் தலைவர்களும் கத்திஇ துப்பாக்கிஇ பீரங்கிஇ கப்பல் விமானம் என்பதை நம்பிப் போராடினார்கள். குஜராத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஒற்றை மனிதர் மட்டும் எந்த ஆயுதமும் இல்லாமல் போர்க்களத்தில் புகுந்தார். “இந்த நாடு எங்களுடையது. உம்முடையதுஅல்ல…” என்ற ஒற்றை உண்மையை பிரிட்டிஷார் முன் வைத்துப் போராடினார். அந்த சத்தியத்தின் முன் எல்லா ஆயுதங்களும் கூர்மழுங்கிப் போயின. யார் அவர்? – சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணல் காந்தியடிகள்.

“நிராயுதபாணியில் நின்று போராடும் ஒற்றை மனிதனின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்காரர்களால் ஏன் நசுக்க முடியவில்லை?” என்று எதிர்கட்சிகள் பாய்ந்த போது சர்ச்சில் சொன்ன பதில் ஆழமானது. “அந்த மனிதன் கத்தியைய் எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியைத் தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கி எடுத்துப் போராடினால் நான் குண்டு மழை பொழிந்து அழித்திருப்பேன். அவர் சத்தியத்தை அல்லவா கையில் எடுத்துக் கொண்டு போராடுகிறார். சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதை நண்பருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்றார் சர்ச்சில்.

எதிரியையும் அன்பால் அஹிம்சையால் சத்தியத்தால் பணியவைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தது. உலகம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உலகத்தைப் பாதித்த நூறு போர் என்ற பட்டியலில் எழுதினால் அதில் மகாத்மா காந்தியும் ஒருவர். உலக வரலாறு அவரை ஒருபோதும் ஒதுக்காது.

இதற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்வில் நடந்த மற்றுமொரு உதாரணம் ஒரு நாள் காந்தி தனது கிராமத்தில் பிரார்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு முஸ்லீம் மனிதர் காந்தியின் தொண்டையை பிடித்தார். பிடித்த உடனேயே காந்தி குலைந்துபோய் தளதளர்த்து கீழே விழுந்தார். கீழே விழுகின்ற அந்த தருணத்தில் தனது மெல்லிய குரலில் குர்ஆனில் இருந்து சில வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகளை கேட்டவுடனேயே அந்த முஸ்லீம் மனிதர் இவ்வாறு கூறினார். “மன்னிக்கவும். தங்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்தேன்”. தங்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய வேண்டும்? என்று வினவினார். அதற்கு காந்தி இவ்வாறு பதில் கூறினார்.

“ஒன்றே ஒன்றை மட்டும் எனக்காகச் செய் நீ என்னிடம் என்ன செய்ய முயற்சித்தாயோ அதை யரிடமும் சொல்லாதே.

இல்லையென்றால் இதுவே இந்து-முஸ்லீம் மதக் கலவரத்திற்கு காரணமாக அமையும்”.

“என்னை மறந்துவிடு! உன்னை மன்னித்துவிடு!!”

——————————————————————————————

ஊனம் தடையில்லை

நமது உடலில் இருக்கின்ற குறைகள் நமது சாதனைகளுக்கு முட்டுக்கட்டைகள் கிடையாது. சாதிக்கத் துடிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த ஊனமே ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளன. உதாரணமாகஇ இந்த உலகில் ஏதாவது ஒரு குறையுடன் பிறந்து தங்களின் சாதனைகளுக்கு என்றும் ‘சாவில்லை’ என்று நிலைநாட்டியவர்கள் ஏராளம். உதாரணமாக

சாண்டோ எனபவர் பலகீனமான நோயாளியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார். சாண்டோ எவரிடமிருந்தும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. அவர் விரும்பியது பலம்! மன உறுதியுடன் தேகப் பயிற்சி செய்து உடல் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். அவர் காலத்தில் ‘மிகவும் பலசாலி’ என்ற பெயரையும் பெற்றார்.

உடல் ஊனமுற்ற பலகீனமான உடலை உடைய ஜார்ஜ் ஜோவெட் என்கிற சிறுவன் தன்னுடைய நிலையை எண்ணி ஒரு போதும் வருந்தவில்லை. மற்றவர்கள் தனக்காக வருத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை. தன்னுடைய மனதையும் உடலையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொண்டான். என்ன நடந்தது? அடுத்து பத்து ஆண்டுகளில் ‘செயலுக்கு ஏற்ற விளைவு’ என்ற இயற்கைவிதி செயல்பட்டது. உலகத்தின் ‘மிகச்சிறந்த பலசாலி’ என்கிற பெயரைப் பெற்றார்.
ஆனெட் கெல்லர்மேன் – உடல் ஊனமுற்ற நோயாளிப் பெண். முழுஉடலை அவள் விரும்பினாள். பயிற்சி சிகிச்சை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு மன உறுதியுடன் முழுமையான உடலை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். உலகத்தில் உள்ள முழுமையான உடலைப் பெற்ற ஒருத்தியாக தேர்வு செய்யப்பட்டாள். நீரில் ‘டைவ்’ செய்கின்ற உலகச் சாம்பியன் பட்டத்தையும் அவள் வென்றாள்.
பீதோவன் சாகாவரம் பெற்ற ராகங்களை செவிடாக இருந்த நிலையில் தான் உருவாக்கினார்.
கவிஞர் மில்டன் – ‘சொர்க்கம் இழுக்கப்படல்’ என்கிற காவியத்தை பார்வையற்ற நிலையில் தான் எழுதி முடித்தார்.

ஃபிராங்க்ளின் ரூஸ் வெஸ்ட் – இளம்பிள்ளை வாதத்தால் கால் ஊனமுற்ற நிலையிலும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார்.

ராபர்ட் லூயி ஸ் ஸ்டீபென்சன் – ஒரு மணி நேரம் கூட இருமலில் இருந்தும் நெஞ்சு வலியில் இருந்தும் விடுபட்டது இல்லை. அந்த நிலையிலும் ‘புதையல் தீவு’ போன்ற அருமையான கதைகளை எழுதி படைத்தார்.

எடிசன் தன்னுடைய பரிசோதனைகளில் காட்டியதைப் போல நாமும் தொடர்ந்து முயற்சியில் உறுதியினைக் காட்டுவோம். பல தோல்விகளுக்குப் பிறகுதான் சரியானது என்ற தீர்வைக் கண்டுபிடிக்க முடிகிறது.

இவர்கள் யாவரும் குறைபாடுகள் உடையவர்கள் அல்ல. தங்களின் குறைபாடுகளை ஈடுசெய்ய மிக உயர்ந்த கோட்ப்பாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள். அதை தங்களின் வாழ்க்கையில் பிரதிபலித்திடவும் செய்தனர்.

“முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை”.

———————————————————

வாழ்க்கை

“வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது”. இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.

மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!

பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!

உழைத்துக் கொண்டிருங்கள்!!!

நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.

ஒரு வேளை நாளைக்குக் கடிகாரம் நின்று போய்விடலாம்.
நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடியம். ஆனால் வாழ்க்கையின் மற்ற பரிமாணங்களை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அதனுடைய ஆழம் அகலம் மற்றும் உயரம் ஆகியவை உங்களுடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையே. இந்த பரிமாணங்களுக்குள் வாழ்க்கை என்கிற அதிசயத்தை நீங்கள் வாழ முடியும். திரும்பவும் நிகழ முடியாத அதிசயம் இது.

————————————————————————

பிரச்சனை


“பிரச்சனையில் இருந்து தப்பித்து போவதற்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ அதே அளவு சக்திதான் பிரச்சனையை புரிந்துகொண்டு வெற்றி கொள்ளுவதற்கும் தேவையாக இருக்கிறது”. பிரச்சனையில் இருந்து தப்பித்துப்போக முயன்றால் அது உங்களை தொடர்ந்துவந்து கொண்டே இருக்கும். பிரச்சனையை புரிந்து கொண்டு நீங்கள் தீர்க்க முயலும் போதுஇ அது உங்களை விட்டு முற்றிலுமாக நீங்கி விடும்.

பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்குமாதலால் அவற்றை அவ்வப்போதே தீர்த்து விடுவது அவசியம். இல்லாவிட்டால் அவை ஒன்று சேர்ந்து சுமையாகி உங்களை அழுத்தத் தொடங்கும். தீர்க்க முடியாத பிரச்சனைகளால்தான் உலகத்தில் பல ஆண்களும் பெண்களும் மன அளவிலும் உடல் அளவிலும் சோர்வுற்று முறிந்து போகிறார்கள்.

எந்த அளவிற்கு ஒருவன் பிரச்சனையி்ன் யதார்த்தத்தை நேர்முகமாகச் சந்திக்கிறானோ அந்த அளவுக்கு அவன் பலசாலியாக வெளிப்படுகிறான். அதே சமயம் எந்த அளவுக்கு பிரச்சனையில் இருந்து தப்பி ஓட முயல்கிறானோ அந்த அளவுக்கு வாழ்க்கையினையும் சிக்கலாக்கிக் கொள்கிறான். பிரச்சனையை நேரடியாகச் சந்தித்து அதன் மையப்பகுதியில் நுழைந்து அதன் தன்மையினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்ற போது நீங்கள் பலம் பெறுவதோடு அதைச் சமாளிக்கின்ற திறமையினையும் பெற்று விடுகிறீர்கள்.

மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு

வலிமையுண்டு வெற்றிதரும் வருந்திடாதே!
எதிர்த்து வரும் துன்பத்தை மதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமடா!!

“பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தான் மகிழ்ச்சியே இருக்கிறது”.

6.25.2010

வெளிநாட்டு பின்னணி கொண்ட மாணவர்கள் பரீட்சையில் சாதனை

இந்த ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற உயர் கல்விக்கான பரீட்சையில் முடிவுகளில் வெளிநாட்டு பின்னணி கொண்ட மாணவர்கள் அதிகூடிய புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். கிம்நாசியம் உயர் வகுப்புக்களில் 35.500 மாணவர்கள் சிறப்பாக கற்றுத் தேறியிருக்கிறார்கள். இவர்களில் 3011 பேர் வெளிநாட்டு பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள். கடந்த 1999 ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 1783 பேர் அதிகமாக உள்ளனர். சென்ற வாரம் ஈரான் – பாலஸ்தீன பெற்றோருக்கு பிறந்த அமினா மியாய்டி என்ற 19 வயது மாணவி 12 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தார். இப்போது பரடைசியா கிம்நாசியத்தில் படித்த ஷோபியா சிவகுமரன் என்ற தமிழ் மாணவி உயர் புள்ளிகள் பெற்று பரடைசியா கிம்நாசியத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது இடம் பெற்ற மாணவியாக தேர்வாகியுள்ளதாக 24 ரீம பத்திரிகை எழுதியுள்ளது. அதேபோல ஒல்போ பல்கலைக்கழகத்தில் திரைப்படத்துறை, ஊடகத்துறைக்கான பீ.எஸ்.சி கற்கையில் 12 புள்ளிகள் பெற்று சித்தயடைந்துள்ளார் வஸந்த் செல்லத்துரை என்ற மாணவர். பல நகரங்களிலும் தமிழ் மாணவர்களின் புள்ளிகள் குறித்த தகவல்களை பெற்றபோது சுமார் 10 புள்ளிகள் பெற்று முன்னணி வகிப்பதைக் காணமுடிகிறது. இதுபோல சகல நகரங்களிலும் வெளிநாட்டு பின்னணி கொண்ட மாணவர்கள் கல்வியில் முன்னணி பெற்று வருகிறார்கள்.

6.22.2010

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை- டெ‌ல்‌லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம்

பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. அ‌திலு‌ம் ‌பி‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் த‌ம்ப‌திக‌ள் ச‌ந்‌தி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் போது மு‌த்த‌ம் கொடு‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லை எ‌ன்று உய‌ர்‌நீ‌திம‌ன்ற ‌‌நீ‌திப‌திக‌ள் ஒரு ‌தீ‌ர்‌ப்‌பி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

டெ‌ல்‌லி துவாரகா மெ‌ட்ரோ ர‌யி‌ல் ‌நிலைய‌ம் அரு‌கி‌ல் ஒரு இள‌ம் ஜோடி ‌சி‌ரி‌த்து‌ப் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது அவ‌ர்க‌ள் ஒருவரு‌க்கொருவ‌ர் மு‌த்த‌த்தை ப‌ரிமா‌றி‌க் கொ‌ண்டதாக‌த் தெ‌ரி‌கிறது. இதை அ‌வ்வ‌ழியே செ‌ன்ற ‌சில‌ர் காவ‌ல்‌நிலை‌ய‌த்‌தி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

உடனடியாக காவல‌ர்களு‌ம் ‌விரை‌ந்து வ‌ந்து, அ‌ந்த ஜோடியை கைது செ‌ய்து காவ‌லி‌ல் வை‌த்தன‌ர். இது கு‌றி‌த்து அ‌ந்த ஜோடி‌யின‌ர் டெ‌ல்‌லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்தன‌ர். எ‌ங்களது காதலு‌க்கு இருவரது ‌‌வீ‌ட்டிலு‌ம் எ‌தி‌ர்‌ப்பு இரு‌ந்ததா‌ல் ஆ‌ர்ய சமா‌ஜ் கோ‌யி‌லி‌ல் நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டோ‌ம். ‌‌திருமண‌த்தை ப‌திவு செ‌ய்து கொ‌ள்ளு‌ம் வரை இருவரு‌ம் அவ‌ரவ‌ர் ‌வீ‌ட்டி‌ல் வா‌ழ்‌ந்து வரு‌கிறோ‌ம்.

இ‌ந்த நேர‌த்‌தி‌ல்தா‌ன் நா‌ங்க‌ள் துவாரகா ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌‌தி‌ல் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தோ‌ம். ஆனா‌ல் நா‌ங்க‌‌ள் மு‌த்த‌ம் கொடு‌த்து‌க் கொ‌ள்ள‌வி‌ல்லை. செ‌ல்போ‌னி‌ல் நா‌ங்க‌ள் இருவரு‌ம் ஒ‌ன்றாக இரு‌ப்பது போல புகை‌ப்பட‌ம் எடு‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தோ‌ம். இதை யாரோ ‌சில‌ ‌விஷ‌மிக‌ள் காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் புகா‌ர் அ‌ளி‌த்து அவ‌ர்க‌ள் எ‌ங்களை கைது செ‌ய்தன‌ர். நா‌ங்க‌ள் ‌திருமணமானவ‌ர்க‌ள் எ‌ன்று சொ‌ன்னதையு‌ம் காவ‌ல்துறை‌யி‌ன‌ர் கே‌ட்க‌வி‌ல்லை. எ‌ங்க‌ள் ‌மீதான வழ‌க்கை ர‌த்து செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ந்த மனு‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி முர‌ளித‌ர், த‌ம்ப‌தி ‌‌மீது ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள வழ‌க்கு‌க்கு தடை ‌வி‌தி‌த்தா‌ர்.

மேலு‌ம் அவ‌ர் தனது ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. அ‌திலு‌ம் ‌பி‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் த‌ம்ப‌திக‌ள் ச‌ந்‌தி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் போது மு‌த்த‌ம் கொடு‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லை. த‌ங்களு‌க்கு ‌திருமணமா‌கி‌வி‌ட்டது எ‌ன்று கூ‌றிய ‌பிறகு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் நடவடி‌க்கை எடு‌த்தது அ‌தி‌ர்‌ச்‌சியாக உ‌ள்ளது எ‌ன்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளன‌ர்.

6.21.2010

எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகர் கண்டுபிடிப்பு

எகிப்தின் வெளிநாட்டவர் குடியிருப்புப் பகுதி எனக் கருதப்படும் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகரம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராடாரைப் பயன்படுத்தியே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ள்ளது.

கிறிஸ்துவுக்கு முன் 1664 - 1569 ஆண்டுக் காலப்பகுதியில், ஹைக்சொஸ் ஆட்சியின் கீழ் இருந்த வடக்கு டெல்டா பகுதியில் ஆசியாவிலிருந்து வறுமைப்பட்டு வந்தோர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆய்வை மேற்கொண்ட, அவுஸ்திரேலிய வானியலாளரான ஐரின் முல்லர் தலைமையிலான குழுவினர் கூறுகையில், தலைநகர் எத்தனை ஆழத்தின் அடியில் புதையுண்டிருக்கின்றது என்பதைக் கண்டறிவதே எமது நோக்கம் என்கின்றனர்.

டெல்-அல்-டபா நகரின் வீடுகள், வீதிகள் , கோயில்கள், பச்சைப் பசேல் நிலங்கள், நவீன நகரம் போன்றவை ராடாரில் பதிவாகியுள்ளன.

ஆஸி. ஆய்வாளர்கள் குழு 1975 ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.