6.27.2010

த‌மிழ‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌மி‌‌ழி‌ல் கையெழு‌த்‌திட வே‌ண்டு‌ம்'

த‌மிழ‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌மி‌‌ழி‌ல் கையெழு‌த்‌திட வே‌ண்டு‌ம்'' எ‌ன்று உல‌க‌த் த‌மி‌ழ் செ‌ம்மொ‌ழி மாநா‌ட்டி‌ல் வ‌லியுறு‌த்த‌ப்ப‌ட்டது.

கொடி‌சியா வளாக‌த்‌தி‌ல் நடைபெ‌ற்று வரும் உலக‌த் த‌மி‌ழ் செ‌ம்மொ‌ழி மாநா‌ட்டி‌ல் 5வது நா‌ள் ‌‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌திரு‌க்குவளை சகோத‌ரிக‌ளி‌ன் ம‌ங்கள இசையுட‌ன் தொட‌ங்‌கியது.

'தொட‌ர்‌ந்து ‌வி‌த்தாக ‌விள‌ங்கு‌ம் மொ‌‌ழி' எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் நடைபெ‌ற்ற கரு‌த்தர‌ங்கை தொட‌‌ங்‌கி வை‌த்து பே‌சிய சுப.‌வீரபா‌ண்டிய‌ன், த‌மி‌‌ழ் மொ‌ழியை வள‌ர்‌‌க்கு‌ம் பொறு‌ப்பு அரசு, கட‌்‌சி அமை‌ப்புக‌ள், அ‌றிஞ‌ர்க‌ள், ஊடக‌ங்க‌ள், ம‌க்க‌ள் என ஐ‌ந்து தர‌ப்‌பினரு‌‌க்கு‌ம் உ‌ள்ளது எ‌ன்றா‌ர்.

செ‌ம்மொ‌ழி மாநா‌ட்டி‌ன் வெ‌ற்‌றியை கு‌றி‌க்கு‌ம் வகை‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌மி‌‌‌ழி‌ல் கையெழு‌த்‌திட வே‌ண்டு‌ம் எ‌ன்று அவ‌ர் வ‌‌‌லியுறு‌த்‌தினா‌ர்.

நடிக‌ர் சிவகுமா‌ர் மாநா‌ட்டு தலைமையுரை ஆ‌ற்‌றினா‌ர். ஜெகத்க‌ஸ்ப‌ர், ப‌ர்‌‌வீ‌ன் சு‌ல்தானா, வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ராம‌லி‌ங்க‌ம், அரு‌ள்மொ‌ழி ஆ‌கியோ‌ரு‌ம் த‌மி‌ழ் மொ‌ழி‌யி‌ன் ‌சிற‌ப்பை எடு‌த்துரை‌த்தன‌ர்.

க‌ம்ப‌ம் செ‌ல்வே‌ந்‌திர‌ன், ‌திரு‌ச்‌சி செ‌ல்வே‌ந்‌திர‌ன் ஆ‌கியோரு‌ம் த‌மி‌ழ் மொ‌ழி‌யி‌ன் ‌சிற‌ப்பை வெ‌ளி‌ப்படு‌த்‌தின‌ர். த‌மிழ‌ர்க‌ள் ‌பிற மொ‌ழியையு‌ம் ந‌ட்புட‌ன் பா‌ர்‌ப்பதாக செ‌ல்வே‌ந்‌திர‌ன் கு‌றி‌ப்‌பி‌‌ட்டா‌‌ர்.

முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன், ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் மு.க.அழ‌கி‌ரி ஆ‌கியோ‌ர் கரு‌த்தர‌ங்கை பா‌ர்‌த்து ர‌சி‌த்தன‌ர்.

மாநா‌ட்டி‌ன் ‌நிறைவு நா‌ள் ‌நிக‌ழ்‌ச்‌சியை காண ஏராளமானவ‌ர்க‌ள் கு‌வி‌‌ந்து இரு‌ப்பதா‌ல் கோவை நகரமே ‌விழா‌க்கோல‌ம் பூ‌ண்டு‌ள்ளது.

0 comments:

Post a Comment