6.30.2010

அமெ​ரிக்​கா​வில் இந்​திய விஞ்​ஞானி கொலை

அமெ​ரிக்​கா​வில் இந்​திய விஞ்​ஞானி ஒரு​வர் மூன்று இளை​ஞர்​க​ளால் தாக்​கப்​பட்டு உயி​ரி​ழந்​துள்​ளார்.​ அ​வ​ரது பெயர் திவ்​யேந்து சின்ஹா ​(49).​ ஐஐடி காரக்​பூர் முன்​னாள் மாண​வர்.​

அமெ​ரிக்​கா​வில் கணினி விஞ்​ஞா​னி​யாக வேலை பார்த்து வந்​தார்.​ ​இந்​நி​லை​யில் வெள்​ளிக்​கி​ழமை,​​ நியூ​ஜெர்​ஸி​யில் உள்ள தனது வீட்​டின் அருகே சின்ஹா,​​ அவ​ரது இரண்டு மகன்​க​ளு​டன் சாலை​யில் நடந்து சென்று கொண்​டி​ருந்​தார்.​ ​÷அப்​போது அங்கு வந்த 17 வயது மதிக்​கத்​தக்க மூன்று இளை​ஞர்​கள் சின்​ஹாவை கண்​மூ​டித்​த​ன​மாக தாக்​கி​யுள்​ள​னர்.​ இதில் பலத்த காய​ம​டைந்த அவர் திங்​கள்​கி​ழமை உயி​ரி​ழந்​தார் என போலீ​ஸôர் தெரி​வித்​த​னர்.​ ​

இந்த சம்​ப​வம் குறித்து கருத்து தெரி​வித்த உள்​ளூர் வழக்​க​றி​ஞர் புரூஸ் கேப்​ளன்,​​ " தாக்​கு​தல் குறித்து விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது;​ இறுதி கட்ட விசா​ர​ணைக்கு பிறகே தாக்​கு​த​லுக்​கான உண்மை கார​ணம் குறித்து தெரி​ய​வ​ரும்' என்​றார்.​ இ​த​னி​டையே,​​ தாக்​கு​த​லுக்கு கார​ண​மான மூன்று இளை​ஞர்​க​ளும் கைது செய்​யப்​பட்டு,​​ அவர்​கள் மீது குற்​றப்​பத்​தி​ரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

0 comments:

Post a Comment