அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி ஒருவர் மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது பெயர் திவ்யேந்து சின்ஹா (49). ஐஐடி காரக்பூர் முன்னாள் மாணவர்.
அமெரிக்காவில் கணினி விஞ்ஞானியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை, நியூஜெர்ஸியில் உள்ள தனது வீட்டின் அருகே சின்ஹா, அவரது இரண்டு மகன்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். ÷அப்போது அங்கு வந்த 17 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் சின்ஹாவை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார் என போலீஸôர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உள்ளூர் வழக்கறிஞர் புரூஸ் கேப்ளன், " தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது; இறுதி கட்ட விசாரணைக்கு பிறகே தாக்குதலுக்கான உண்மை காரணம் குறித்து தெரியவரும்' என்றார். இதனிடையே, தாக்குதலுக்கு காரணமான மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment