7.02.2010

அஜீத்தின் 50வது படத்தில் அனுஷ்கா

அஜீத்தின் ஐம்பதாவது படம் தற்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. கெளதம் இயக்கப்போவதாக இருந்த இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இயக்குநர் கெளதமுக்கும் அஜீத்திற்கு ஒத்துவராமல் போனதால் அந்தப்படம் இழுபறியாகவே இருந்தது.

இந்த இழுபறி தற்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. வெங்கட் பிரபுவை இந்த படத்திற்கு இயக்குநராக்கியிருக்கிறார் அஜீத், இப்படத்திற்கு 'மங்காத்தா' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.

அஜீத்திற்கு ஜோடியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். முதலில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. இயக்குநர் மாறியதால் படத்தின் நாயகியும் மாறிவிட்டார்.

சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அனுஷ்காவிற்கு பெரிய ஹுரோக்களுடன் நடிக்க வாய்ப்பு குவிகிறதாம். (டிஎன்எஸ்)

0 comments:

Post a Comment