கடந்த 13 வருடங்களாக மின்சாரவசதிகள் எதுவுமின்றி இங்கு வாழ்ந்து வந்த எமா தற்போது சுயமாகவே மின்சாரத்தேவை மற்றும் உணவுத்தேவைகளை பூர்த்திசெய்யும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். இதற்கிடையில் இவர் ஒரு ஒக்போர்ட் பல்கலைக்கழகபட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளார் லூயிஸ்பேட்டன் என்பவர். இவர் தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத்து இந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுதான் அந்த இரகசியம் :
“டைட்டானிக் கப்பலுக்கு முன்னால் பனிக்கட்டி மிதப்பதைக் கண்டுபிடித்து, கப்பலை இடது பக்கமாக திருப்பச் சொன்னார்கள். ஆனால் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பி விட்டார்கள்.
மேலும் திசை திருப்பும் கருவியும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால்தான் கப்பல் பனிக்கட்டியில் மூழ்கிவிட்டது” என்று அவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கு முன் பனிக்கட்டியில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் உயிர்காக்கும் படகு மூலம் தப்பித்துக் கொண்டனர்.
உயிர் தப்பியவர்களில் சார்ளஸ் மைட்டோலர் என்ற மூத்த கப்பல் அதிகாரியும் ஒருவர். இவருடைய பேத்தி தான் லூயிஸ்பேட்டன். இவர் டைட்டானிக் கப்பல் மூழ்கியது தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
அதில் டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார். தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத்தே இந்த இரகசியத்தை அவர் தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்டிலும், ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையை கையாளத் துவங்கியுள்ளன.பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க துவங்கியுள்ளன.
சிறிய அளவில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 5,000 பேரை வேலை நீ்க்கம் செய்தது. இந் நிலையி்ல் இந்த வாரத்தில் மேலும் பலரை நீக்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.எத்தனை பேர் நீக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.
ஆனால், அது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்ட் கிளைகள் முழுவதிலும் இந்த பணி நீக்கம் அமலாக்கப்படும் என்று தெரிகிறது.
யூரோ நாணயங்களுடன் சென்ற பாரவண்டியில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக சுமார் இரண்டு இலட்சம் யூரோ நாணயங்கள் இத்தாலியில் உள்ள விரைவுச் சாலையில் சரிந்து கொட்டுப்பட்டன. பின்னால் வந்த வாகனங்களில் உள்ளோர் நாணயங்களை பொறுக்கும் வேட்டையில் குதித்தனர். இதன் பின்னர் நடாத்திய தேடுதலில் கணிசமான தொகை மீட்கப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 50.000 யூரோ மாயமாய் மறைந்துவிட்டது.
அதன்படி கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டால் இது குற்றமாகக் கருதப்படும்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதமும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
சமீப காலமாக பிரான்ஸ்சில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பற்சிகிச்சைக்காக பயன்படுத்திய கருவிகள் சரியான முறையில் சுத்தம் செய்யப்படாத காரணத்தால் சுமார் 1800 பேர் வரை எச்.ஐ.வி கிருமியினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சென்ற் லூயிசில் உள்ள யோன் கோகன் மெடிக்கல் சென்டரில் பற்சிகிச்சை பெற்றவர்களே இத்தகைய பாதிப்பை சந்தித்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது. hepatitis B, hepatitis C og hiv ஆகிய கிருமிகளே பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டால் கடும் சீற்றமடைவார்கள் என்றும், இது பாரதூரமான ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி ஒருவர் மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது பெயர் திவ்யேந்து சின்ஹா (49). ஐஐடி காரக்பூர் முன்னாள் மாணவர்.
ஆர்பிஸ் என்ற தொண்டு நிறுவனம், உலகம் முழுவதும் கண்பார்வை குறைவை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள கண் டாக்டர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, ஒரு விமானத்தையே நவீன வசதிகளுடன் கூடிய கண் மருத்துவமனை பயிற்சி மையமாக மாற்றி உள்ளது. பறக்கும் கண் மருத்துவமனை என அழைக்கப்படும் இது, இப்போது இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் உள்ள ஹலிம் விமான நிலையத்தில் நிற்கிறது. அடுத்து மாதம் 9ம் தேதி வரை இங்கு டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கும்.
உலகிலேயே சிறந்த மொழி தமிழ் என்று மாஸ்கோ பல்கலைக்கழக தமிழறிஞர் அலெக்சாண்டர் துபி யான்ஸ்கி கூறினார்.
சமூக இணையதளமான பேஸ்புக், பொழுதை போக்குவதற்கானது என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் அதையும் தாண்டி பல நன்மைகளை செய்து வருகிறது. ஆம், 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தாய், மகனை மீண்டும் இணைத்துள்ளது பேஸ்புக்.
சுவீடன் நாட்டின் மன்னர் கார்ல் 16-வது கஸ்டாப் (64), ராணி சில்வியா (66) ஆகியோரின் மூத்த மகள் விக்டோரியா (32). இவர் டேனியல் வெஸ்ட்லிங் (36) என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.டேனியல் ஒரு சாதாரண குடிமகன் ஆவார். உடற்பயிற்சி கற்றுத்தரும் பயிற்சியாளர். இவர் இளவரசி விக்டோரியாவுக்கு உடற்பயிற்சி கலையை கற்றுத்தர நியமிக்கப்பட்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இதற்கு முதலில் எதிர்ப்பு கிளம்பியது.
இவர்கள் திருமணத்துக்கு இளவரசி விக்டோரியாவின் பெற்றொர் திடீரென சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டாக் ஹோமில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு திருமணம் நடந்தது.
இதில், இளவரசி விக்டோரியாவின் பெற்றொர், அவரது சகோதரிகள் கார்ல் பிலிப் (31), மாடலின் (28) மற்றும் நார்வே, டென்மார்க் நாடுகளின் இளவரசர்கள் மற்றும் இளவரசிகள் கலந்து கொண்டனர்.
சாதாரண குடிமகனை திருமணம் செய்து கொண்ட விக்டோரியா அடுத்து முடிசூட போகும் பட்டத்து இளவரசி ஆவார்.