Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

7.04.2010

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முதல்வர் கருணாநிதியின் குடும்பம் அரசியல் மட்டுமல்லாமல் கலையுடன் பிறந்த குடும்பமுமாகும். கருணாநிதியே ஒரு கலை பிதாமகராக இருக்கிறார். அவரைத் தொடர்நது மூத்த மகன் மு.க.முத்து நடிகராக இருந்தார். முத்துவின் மகன் இப்போது பாடகராக, நடிகராக மாறி வருகிறார்.

அதேபோல மு.க.ஸ்டாலின் சினிமாவில் நடித்துள்ளார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பிசியான தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

மத்திய அமைச்சராக உள்ள மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் தயாரிப்பாளராக இருக்கிறார். மு.க.தமிழரசுவின் மகன் ஹீரோவாகியுள்ளார். இதன் மூலம் தமிழரசும் தயாரிப்பாளராகியுள்ளார்.

இந்த நிலையில், மகள் கனிமொழியும் இப்போது திரைத் துறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. படம் ஒன்ற அவர் தயாரிக்கவுள்ளதாக கனிமொழிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இயக்குநர் , நடிகர், நடிகையர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரியவில்லை. அதுதொடர்பான விவாதம் நடந்து வருவதாக தெரிகிறது. இந்தப் படம் பிரமாண்டமானதாக இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

7.03.2010

தமிழில் படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை 10 நாட்களில் சட்ட முன்வடிவு

தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்க உரிய சட்டம் கொண்டு வருவது பற்றி, சட்டநிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் 10 நாட்களுக்குள் சட்ட முன்வடிவை தயாரிப்பதென்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டது.

கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை நிறைவேற்றுவது குறித்த கலந்தாய்வு கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னை கோட்டையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நூலக அரங்கில் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் அன்பழகன் உள்பட மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, தொல்லியல் துறை ஆணையர், தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்காகவும், செம்மொழி தமிழாய்வு நூலகத்தை கோட்டையில் பழைய சட்டசபை வளாகத்தில் தொடங்கி வைத்ததற்காக வும் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிதியமைச்சர் அன்பழகன் முன்மொழிந்தார். அதை அனைவரும் வரவேற்றனர். பின்னர், மாநாட்டு தீர்மானங்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில், பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்க இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 15 நாட்களுக்குள் அது பற்றிய விவரங்களை முதல்வருக்கு தாக்கல் செய்வதாக வேளாண்மைத் துறை செயலர் கூறினார்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு, இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை செயலருக்கு தமிழக தலைமைச் செயலர் கடிதம் எழுதியிருப்பதாகவும், அடுத்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதவிருப்பதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்து அதன் மீது விவாதம் நடத்த கோரலாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று முதல்வர் எழுதிய கடிதம் பற்றியும், தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு 2006ம் ஆண்டில் அனுப்பி வைக்கப்பட்ட கருத்துருக்கள் பற்றி விவாதிக்கப்பட்டு மீண்டும் இதுகுறித்து மத்திய அரசை வலி யுறுத்த முடிவெடுக்கப்பட்டது.

தமிழகத்தின் ஆட்சிமொழியாக நிர்வாக மொழியாகத் தமிழ் ஆக்கப்பட தலை மைச் செயலாளர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்க உரிய சட்டம் கொண்டு வருவது பற்றி, சட்டநிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் 10 நாட்களுக்குள் சட்ட முன்வடிவை தயாரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.

தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்பொருள் ஒன்றை தேர்வு செய்து, அதனை உருவாக்கியவருக்கு கணியன் பூங்குன்றனார் பெயரில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் விருதும், பாராட்டுச்சான்றிதழும் வழங்குவதை ஆண்டுதோறும் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தமிழகத்தின் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி அடுத்த கல்வியாண்டு முதல் இடம்பெறுவதற்கு ஆவன செய்ய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆலோசனைகளையும் பெற தீர்மானிக்கப்பட்டது.

மதுரை மாநகரில் தொடங்கவுள்ள தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கத்தின் பொறுப்புகள் குறித்த தீர்மானம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அடுத்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை எப்படி, எங்கு நடத்துவது என்ற திட்டங்களையும், திராவிடர்மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தர கண்காட்சி ஒன்றை அமைத்தல், ஆவணக் காப்பகம் உருவாக்கி பராமரித்தல், தனித்தனி தீவுகளைப் போல சிதறுண்டு கிடக்கும் தமிழாராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செயல்படுத்த திட்ட அறிக்கையை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தயாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழ்மொழியின் சிறந்த படைப்புகளைப் பிற இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும், பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்திடவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் அறிவியல் திறனை வளர்ப்பதற்கான நூல்களை பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ள ஒரு வல்லுநர் குழு அமைப்பதென்றும், மொழிபெயர்ப்பு பயிற்சி அளித்திட தமிழ்ப் பல்கலைக் கழகம் திட்டம் வகுத்து செயல்படுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக, தமிழ் வளர்ச்சிக்கு தனியாக தமிழக அரசின் சார்பில் ரூ.100 கோடி ரூபாய் சிறப்பு நிதியத்தை விரைவில் உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.01.2010

வரலாறு படைத்த செம்மொழி மாநாடு!

திசையெங்கும் மக்கள் கூட்டம்! திரும்பிய பக்கம் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளம்! தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்க, செம்மொழிச் சிகரத்தில் அமரவைத்த தமிழ்தாய்க்கு புகழ் மகுடம் சூட்ட கொங்கு மண்டலம் கோவையில் தமிழர்கள் கூடிய 5 நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழர்களின் நூற்றாண்டுக் கனவாக இருந்த செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத்தந்த தமிழக முதலமைச்சர், அதை அதிகார பூர்வமாக அறிவித்த இந்தியப் பேரரசின் ஆட்சியாளர்கள், அதற்குப் பெரிதும் துணை நின்ற சோனியா காந்தி ஆகியோருக்கு தமிழர்கள் நன்றி கூறும் விழாவாக, உலக அரங்கில் தமிழின் மேன்மையை அதன் தொன்மையை, செழுமையை, சிறப்பை வெளிப்படுத்தும் சீர்மிகு விழாவாகவும் இம்மாநாடு சிறப்புற நடைபெற்றது.

உலகத் தமிழச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரையிலும் கோவை மாநகரின் "கொடிசியா' வளாகத்திலும் அதன் அருகே அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலிலும் இந்த தமிழ்த் திருவிழா நடைபெற்றது.

மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கண்காட்சி இணைய தளக்கண்காட்சி, புத்தக் கண்காட்சி ஆகியவை மக்களை வெகுவாக ஈர்த்தது. தினமும் சுமார் 50 ஆயிரம் மக்கள், குடும்பம், குடும்பமாக வந்து கண்காட்சியைப் பார்வையிட்டுச் சென்றனர்.
மாநாட்டு பொது அரங்க நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இசை நிகழ்ச்சி, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டி மன்றம், சிறப்புக் கருத்தரங்கம், நாட்டிய நாடகம் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பந்தல் நிறைய பல்லாயிரக்கணக்கானோர் வந்து அமர்ந்து கண்டு, கேட்டு களிப்புற்றதைக் காண முடிந்தது.
கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 4 முகப்பரங்குகள், 23 ஆய்வரங்குகளில் நான்கு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கும் ஆயிரக்ணக்கான தமிழறிஞர்களும், ஆய்வாளர்களும், நோக்கர்களும், வெளிநாட்டுப் பேராளர்களும் வருகை தந்து சிறப்பித்தது செம்மொழி மாநாட்டுக்குச் சிறப்புச் சேர்த்தது.

மாநாடு நடைபெற்ற 5 நாட்களும், ஏறத்தாழ எல்லா நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் இருந்து பெருமை சேர்த்ததை பலரும் பராட்டினார்கள்.

இதுதவிர மத்திய, மாநில அமைச்சர்கள், குறிப்பாக கனிமொழி எம்.பி. உள்ளிட்ட மாநாட்டுக்குழுவின் நிர்வாகிகள் ஆங்காங்கே சுற்றிச் சுழன்று மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்ததையும், மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றதையும் காண முடிந்தது.
கண்காட்சியைக் காண தினமும் மக்கள் கூட்டம் அலை மோதுவதைக் கண்ட முதல்வர், இக்கண்காட்சியை மாநாடு முடிந்த பின்னரும் ஜூலை 4ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இது கோவை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

இக்கண்காட்சி குறித்து கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சங்கீதா கூறுகையில், இக்கண்காட்சியைக்காண சுமார் மூன்று மணி நேரம் வரிசையில் நின்று வந்தேன், ஒரு கட்டத்தில் வரிசையை விட்டு வெளியே சென்று விடுவோமா, என்று கூட யோசித்தேன் ஆனால், உள்ளே வந்து இணையதளக் கண்காட்சியையும், பொதுக் கண்காட்சியையும் பார்த்த போது, வாழ்நாளில் கிடைக்க முடியாத ஒரு அரிய பொக்கிஷத்தை, தமிழர்களின் வரலாற்று ஆவணங்களான, தமிழின் சிறப்பை உணர்த்தும் இக்கண்காட்சியை காணும் அரிய வாய்ப்பை தவறவிட இருந்தோமே என்று எண்ணினேன். இதுபோன்ற நிரந்தரக் கண்காட்சி கோவையில் இடம் பெற வேண்டும் என்பதே என்விருப்பம் என்றார்.

இதே கருத்தை பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரையிலும் வெளிப்படுத்தினர். ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவ, மாணவியரும், பொதுமக்களும் தங்களிடம் உள்ள செல்போன் மற்றும் டிஜிட்டல் கேமராக்களில் கண்காட்சி அரங்குகளை படம் பிடித்துச் சென்றதைக் காண முடிந்தது.

இந்த மாநாட்டில், தமிழக அரசின் செய்தித் துறையின் பங்களிப்பும், பணியும் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. 600க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் ஒருங்கிணைந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்வது, மாநாட்டு நிகழ்வுகள், முதலமைச்சர், துணை முதலமைச்சரின் பேச்சுக்களின் தமிழ், ஆங்கில பிரதிகளை உடனுக்குடன் விநியோகிப்பது, பத்திரிகையாளர்களை, தங்குமிடத்தில் இருந்து மாநாட்டு அரங்கிற்கு அழைத்து வருவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்தித் துறை அதிகாரிகளும், அலுவலர்களும் திறம்படச் செய்தனர்.

அருமையான தங்கும் இட வசதி, அற்புதமான விருந்தோம்பல், எந்த நேரத்தில் என்ன விளக்கம், தகவல் கேட்டாலும் முகம் சுளிக்காமல் நட்புணர்வுடன் பதிலளிப்பது என்று மிகுந்த பாங்குடனும், நேர்த்தியுடனும் செய்தித் துறையினர் செயல்பட்டது பாராட்டத்தக்கது.

செம்மொழி மாநாட்டின் சிறப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் ஜி.வெங்கட்ராமன், இத்துறையின் கவுரவப் பேராசிரியர் டாக்டர். ஏ.சந்திரசேகரன், தொல்லியில் துறைப் பேராசிரியர் பாலாஜி, வேலூர் மேல்விசாரம் பகுதியிலுள்ள அப்துல் ஹக்கீம் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஒன்ன மாறனன் ஆகியோர், தமிழால் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்து இந்தச் மாநாடு மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

மொழி தொடர்பான மாநாடு, கூட்டங்கள் என்றால், அதிகபட்சம் இரண்டாயிரம் பேர் தான் கூடுவார்கள், இங்கு ஆய்வாளர்கள், கட்டுரையாளர்களே ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

பொது அரங்க மாநாட்டிலும், கண்காட்சியை காணவும் லட்சக் கணக்கில் மக்கள் ஆர்வத்துடன் வருவது சிறப்பாக உள்ளது என்று கூறினார்கள்.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பது போல ஒன்றே குலம், ஒரே மொழி தமிழ் என மக்கள் ஜாதி, மத, இனம் கடந்து வந்திருப்பதும், 50 நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் வந்து பங்கேற்றிருப்பதும் பெருமைக்குரியது என்று கூறிய அவர்கள், இனி பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா போல செம்மொழி விழா கொண்டாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றனர்.

"வரலாறு மீட்டுருவாக்கத்தில் நாட்டுப்புறப் பாட்ல்கள் மற்றும் கதைப் பாடல்களின் பங்களிப்பு' என்ற கட்டுரையையும் பேராசிரியர் வெங்கட்ராமன் தாக்கல் செய்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகளை ஒருங்கிணைத்து நடத்தி வரும் இளங்கோ மெய்யப்பன் மாநாட்டின் பிரமாண்டத்தை, மக்களின் எழுச்சியைக் கண்டு பாராட்டுத் தெரிவித்தார். கலிபோர்னியாவிலுள்ள 28 பள்ளிக் கூடங்களை சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் வாடகைக்கு எடுத்து அங்கு தமிழ் சொல்லித் தருவதாகவும் அவர் கூறினார். பல்வேறு நாட்டு மக்களும் ஆர்வத்துடன் வந்து தமிழ் கற்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும், தமிழ் கற்பதற்கு உரிய "கால் சென்டர்'களை இயக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பெனிசில்வேனியா நாட்டின் ஆய்வாளர் எரிக்மில்லர், கண்ணகி மேல் ஆர்வம் கொண்டு அவரது வரலாற்றை ஆய்வு செய்து வருவதாகவும், அவர் வாழ்ந்த பகுதி முழுவதும் சென்று அங்குள்ள மக்கள் சொல்லும் கண்ணகி தொடர்பான கதைகளை, அவர்களின் வாய்மொழிச்சொல் மூலமே ஆவணப்படமாக எடுத்திருப்பதாகவும் கூறினார். செம்மொழி மாநாடு தமிழை உலகஅளவில் ஒரு புதிய தளத்திற்கு கொண்டு செல்லும் என்றார். தமிழ் மொழி கற்பித்தல் அனைத்தும் செயல்வழி மூலமாகவே அமைய வேண்டும், வெறும் புத்தகப் படிப்பு பயன்தராது என்றும் கருத்துத் தெரிவித்தார்.

மலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழாய்வாளர் முனியப்பன், இணையத்தில் தமிழ் அகராதி மிகமிக குறைவாக இருப்பதாகவும், அதற்குரிய மின் அகராதிகளை அதிகம் உருவாக்க வேண்டும் என்றார். முதலமைச்சரின் 87 வயதைக் குறிக்கும் வகையில் 87 தமிழ் எழுத்தாளர்கள் வருகை தந்து மாநாட்டில் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மொழிக்கு என சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறிய இங்கு பணியாற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம், கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு புதிய வரலாறு படைத்துள்ளது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இதன் தாக்கம் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறினார்.
இப்படி தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள், பொதுமக்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என்று எல்லா தரப்பு மக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்று வரலாறு படைத்ததுடன் தமிழுக்கும், தமிழர்களுக்கும், குறிப்பாக தமிழக முதல்வருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

6.29.2010

ராமேசுவரம், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மீண்டும் படகு போக்குவரத்து

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் போர் முடிந்துள்ள நிலையில் புனரமைப்பு பணிகளை இலங்கை அரசு முடுக்கி விட்டுள்ளது.

அந்த பணிகளுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் முழு அளவில் உதவி செய்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, 27 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.

சமீபத்தில், இந்தியா வுக்கு வந்த அதிபர் ராஜபக்சே, இது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, படகு போக்குவரத்துக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

படகு போக்குவரத்து ஆய்வு பணிகளை மீன் வளத்துறை அதிகாரிகளும், கடல்சார் வாரிய அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:- விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே போர் வெடித்ததால், கடந்த 1983-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கும், இலங்கைக்கும் இடையிலான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தற்போது, 27 ஆண்டுகளுக்கு பிறகு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்க உள்ளது. ராமேசுவரம் மற்றும் தலைமன்னாருக்கு இடையிலும், தூத்துக்குடி மற்றும் கொழும்புக்கு இடையிலும் இரண்டு மார்க்கமாக படகு போக்குவரத்து தொடங்கப்படும்.

நாகப்பட்டினத்தில் இருந்து கொழும்புக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, படகு போக்குவரத்து தொடங்க உள்ளது. இரண்டு நாட்க ளுக்கு ஒருமுறை சென்னையை சேர்ந்த தொழில் மற்றும் தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத் தின் உதவி யோடு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வு பணிகளை, தமிழ்நாடு கடல்சார் வாரியம் நடத்துகிறது.

முதல் கட்டதாக, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை படகு விடப்படும். பின்னர், தினமும் படகுகள் இயக்கப்படும். இந்த படகு போக்குவரத்தினால் இந்தியாவில் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்ய இலங்கை பயணிகள்அதிக அளவில் வருவார்கள்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

முடிந்துவிட்ட செம்மொழி மாநாடும் முடியாத கலைஞர் கனவும்

புலம் பெயர் தமிழரே அடுத்தகட்ட செம்மொழி மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்..
வாலி, வைரமுத்து, சாலமன் பாப்பையா, லியோனிக்கு அப்பால் தமிழை முன்னெடுக்க வேண்டும்

கோவையில் கடந்த 23 ம் திகதி ஆரம்பித்த செம்மொழி மாநாடு நேற்று 27ம் திகதியுடன் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. உலகமெல்லாம் பரவியிருக்கும் தமிழர்கள் புதுமாத்தளனுக்குப் பிறகு ஒன்றாக நோக்கிய ஓர் உன்னத நிகழ்வு. இது கலைஞரின் ஆட்சிக்காலத்து சாதனைகளில் மிகப்பெரிய சாதனை என்று பேராசிரியர் கா. சிவத்தம்பியே பாராட்டியுள்ளார்.

புகழ் மிக்க ஓர் அறிஞன் தமிழ் மொழிக்கு இன்னல் செய்ய நினைத்தால் அவன் அறிஞனல்ல அவனே மூடனாகும். அதுபோல ஒரு மூடன் தமிழ் மொழிக்கு இன்னல் செய்ய நினைக்காவிட்டால் அந்த மூடனே உண்மையான அறிஞனாவான் – இக்கருத்தை கவிதையாக பாடியவர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனாகும்.

பாரதிதாசனின் கருத்துப்படி பார்த்தால் செம்மொழி மாநாடு என்பது தமிழுக்கு யாதொரு இன்னலும் விளைவிக்காத மாநாடாக அமைந்திருக்கிறது. ஆகவே அதைச் செய்தவர்கள் அறிஞர்கள் என்று பாராட்டப்பட வேண்டியவர்களே. எனவேதான் இப்படியான செயல்களுக்கு பகிஷ்கரிப்பு அறிக்கைகள் விட்டு, நாமாகவே முட்டாள்கள் அணிக்குள் போகக் கூடாது என்று முன்னர் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது.

இதுவரை கலைஞர் வெளியிட்ட செலவு விபரத்தைப் பார்த்தால் 500 கோடிகளை தாண்டிச் சென்றுள்ளது. ஆனால் நிஜமான செலவு இதைவிட பல மடங்கு அதிகமாக போயிருக்கும். தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்து, அதற்காக இவ்வளவு பெருந்தொகை பணத்தை செலவிட கலைஞரை விட்டால் வேறு தமிழ் தலைவர்கள் இப்போது உலகில் இல்லை என்பதையும் நாம் மறுக்க முடியாது. இது சாதாரண விடயமல்ல என்று கா.சிவத்தம்பி கூறியது மீண்டும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

அதே நேரத்தில் ஈழத்தில் நிலவிய தமிழ் தேசியத்தை அழிக்க இந்திய அரசு 9000 கோடிகளை சிங்கள அரசுக்குக் கொடுத்தது. அதேபோல சீனா, அமெரிக்கா, ரஸ்யா போன்ற நாடுகள் கொடுத்த பணத்தைக் கூட்டிப்பார்த்தால் தமிழை அழிப்பதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தைவிட அதை வாழவைக்க கலைஞர் செலவிட்ட பணம் மிகமிக சொற்பமானது என்பதையும் தாழ்மையுடன் தமிழினம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறது. எனினும் இப்போது அந்த ஒப்புமைகள் அவசியமல்ல. மாநாட்டின் முடிவில் ஈழத் தமிழருக்கு ஒரு நலவாழ்வு வேண்டுமென்ற அறிவிப்பை கலைஞர் விடுத்து மாநாட்டை நிறைவடைய செய்துள்ளார், அதற்காக கலைஞருக்கு நன்றிகள்.

அதேவேளை செம்மொழி மாநாடு நடாத்தப்பட்ட விதமும், அதில் பங்கேற்ற அறிஞர்கள் முன் வைத்த கருத்துக்களும் தமிழ் இனத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஊட்டியிருப்பதை மறுக்க முடியாது. தமிழ் மொழியில் கற்றோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, தமிழ் வளர்ச்சிக்கு 100 கோடிகள், செம்மொழி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும், ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை செம்மொழி மாநாடு நடாத்தப்படும் என்று கலைஞரால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மிக நல்லவை. அரைகுறை ஆங்கிலத்தில் அழிந்து கிடக்கும் தமிழக தமிழருக்கு ஒரு விழிப்பை ஏற்படுத்த இது கண்டிப்பாக அவசியமாகும்.

செம்மொழி மாநாடு நடாத்தப்பட்ட விதம், அதன் கருதுகோள்கள் போன்றவற்றைச் சீர்தூக்கிப் பார்த்தால் ஏறத்தாழ தமிழகத்தில் நடைபெற்ற 2 வது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளின் சாராம்சமே நினைவிற்கு வருகிறது. தமிழ் என்றால் வள்ளுவரில் இருந்து, பாரதிவரை புலவர்களுக்கான ஊர்திகள் பவனி வருவது, மாளிகைகள் போல அரங்கங்கங்கள் அமைக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெறுவது, அங்கே பல அறிஞரும் வந்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பிப்பது, பின் இனிய தமிழ் நினைவுகளுடன் பிரிந்து செல்வது என்ற அதே கோட்பாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சியாகவே செம்மொழி மாநாட்டின் தோற்றம் தெரிகிறது. தமிழ் என்றால் சேர சோழ, பாண்டியர் காலத்தில் இருக்கிற சாமான் என்ற கருத்தே தொனித்து நிற்கிறது.

<

பராசக்தி திரைப்படத்தில் வழக்கு மன்ற வசனத்தை எழுதிய கலைஞர் இப்போதும் பராசக்தி காலத்து வழக்கு மன்ற படங்களை வர்ணத்தில் எடுத்து வருகிறார். அதுபோல முன்னைய தமிழாராய்ச்சி மாநாட்டு சிந்தனைகளில் ஏற்பட்ட ஒரு பிரமாண்டமாக செம்மொழி மாநாடு இருந்தது. முன்னர் சிறுமியாக இருந்த டைனசோர் ஒன்று இப்போது முதிய டைனசோராக நடந்தது போல தோற்றப்பாடு காணப்பட்டது. செம்மொழி மாநாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு தமிழாராய்ச்சி மாநாட்டில் இருந்து மாற்றம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுவது முக்கியம். அதேவேளை இணைய மாநாடும் இடம் பெற்றதுதானே என்று ஆறுதல் கூறப்பட்டாலும், செயலில் அதன் பெறுபேறுகள் என்ன என்பது இதுவரை வெளியில் தெரியவில்லை.

கவியரங்கத்தில் வாலி பாடிய கவிதை இரண்டு ஐயராத்து அம்மாக்களையும், சுப்பிரமணிய சாமி, சோ போன்றவர்களை கேலி செய்வதாக அமைந்திருந்தது. அந்தக் கவிதையை தமிழக ஊடகங்கள் சாதனை போல பிரச்சாரம் செய்தன. செம்மொழி மாநாட்டில் பாடவேண்டிய செம்மார்ந்த கவிதையா அது என்பது கலைஞருக்கு முன் வைக்கப்பட வேண்டிய கேள்வி. அதேபோல யாரை எடுத்துக் கொண்டாலும் கலைஞரை பாராட்டுவதையே தம் முதல் வேலையாக செய்தார்கள். கலைஞர் பாராட்டப்பட வேண்டியவர்தான், ஆனால் எல்லோரும் கலைஞரை பாராட்டினால் அது தற்புகழ்ச்சியாக அமைந்துவிடும். தி.மு.க கொடிகள் இடம் பெறக்கூடாது என்று தடுத்த கலைஞர் கண்டிப்பாக இப்படியான நாணம் தரும் பாராட்டுக்களையும் நிறுத்தும்படி கட்டளையிட்டிருக்க வேண்டும். செம்மொழி மாநாட்டை நடாத்தியமைக்காக கலைஞரை எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்பது தெரியாமல் இவர்கள் நடந்துள்ளார்கள்.

செம்மொழி மாநாடு முடிந்த பின்னர் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறிய கலைஞர் இப்போது அப்படி நான் கூறவே இல்லை என்று அறுதியாகக் கூறிவிட்டார். இனியவை நாற்பதிற்கு அரங்கு வைத்த கலைஞர் தானே அதைக் கடைப்பிடிக்கவில்லையே என்று மற்றவர் எண்ணும்படி நடத்தல் கூடாது. சங்கப்பலகை என்பது தகுதி உள்ளவர்களுக்கே இடம் கொடுக்க வேண்டும். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளானாலும் அவர்களில் கற்றவனே முன் வரவேண்டும் என்று புறநானூறு கூறும். கலைஞர் தனது பிள்ளைகளையும், குடும்பத்தவரையும், பேரப்பிள்ளைகளையும், வேண்டியவர்களையும் முன்னணியில் உட்கார வைத்து, செம்மொழிக்கே உரிய சங்கப்பலகையின் பெருமையை சரித்துவிட்டார் என்று அவருடைய எதிரிகள் குறைகூற இடம் விட்டிருக்கக் கூடாது.

அதேவேளை கலைஞருக்கு வேண்டிய அனைவரும் மேடைக்கு முன் வந்து அலங்கார பூஜிதைகளாக காட்சி தரக்கூடாது என்பதை தாமாக உணர்ந்திருக்க வேண்டும். அதுவே அவர்கள் கலைஞருக்கு தரும் மரியாதையாகும். அதேவேளை கலைஞர் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தும் சோனியாகாந்தி வரவில்லை என்பதை நாம் அவதானிக்காமல் இருக்க முடியாது. தமிழுக்கான இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என்று கலைஞர் கூறியிருப்பதன் ஆழமும், சிரமமும் நமக்கும் புரிகிறது.

யார் எங்கே எப்போது, எப்படி கவிழப்பார்கள் என்று தெரியாத கூட்டத்திற்குள் கலைஞர் பயணிக்கிறார், அதுபோல எங்கே எப்போது யாரை எப்படிக் கவிழ்ப்பார் என்று சொல்ல முடியாத ஒருவராகவும் அவர் இருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது. ஆகவே அனைவரையும் தவிர்த்து கலைஞர் மீது தனியாக ஒரு விமர்சனம் வைக்க இங்கு யாதொரு முகாந்திரமும் கிடையாது.

அன்று வட இந்தியாவின் பாடலிபுரத்தில் புத்த சமயத்திற்கு அசோகச் சக்கரவர்த்தி இதுபோல ஒரு மாநாட்டை நடாத்தினார். புத்தசமயத்தை இந்தியாவிற்கு வெளியால் எடுத்துச் சென்று நிலைநாட்டுவேன் என்று முடிவு செய்தார். ஒரேயொரு மாநாடு, புத்தசமயத்தை இன்றுவரை காப்பாற்றி நிற்கிறது. இதை செம்மொழி மாநாடு உணர வேண்டும். சாம்ராட் அசோகன் நாடகத்தை அன்னையின் ஆணை படத்தில் எழுதிய கலைஞராவது உணர வேண்டும்.

கலைஞரின் செம்மொழி மாநாட்டின் அடுத்த கட்டத்தை புலம் பெயர் தமிழர்தான் முன்னெடுக்க வேண்டும். அமெரிக்க, சீன, இங்கிலாந்து, அதிபர்கள் போன்ற உயர்மட்ட தலைவர்கள் முதல், கேம்பிறிட்ஜ், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் முதல் கொண்டு உலக அறிஞரையும், தமிழரையும் தமிழுக்காக ஒன்று கூட்டவேண்டும். சாலமன் பாப்பையா, லியோனி பட்டிமன்றமும், வாலி, வைரமுத்து கவியரங்கமும் அல்ல அடுத்த கட்ட தமிழ் வளர்ச்சி என்பதை புலம் பெயர் தமிழர் கலைஞருக்கு புரிய வைக்க வேண்டும்.

முன்னர் தமிழர் தாயகத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வையும் அதை நடாத்திய முக்கிய நிர்வாகிகளை சந்தித்து, இதனால் அடையக் கூடிய அடுத்தகட்ட பயனை நீங்கள் புரிந்துள்ளீர்களா என்று கேட்டபோது அவர்களால் உரிய பதிலைக் கூற முடியாதிருந்தது. ரஸ்யாவில் பொங்கு தமிழ் போல மக்களை ஒன்றிணைத்து, பொறிஸ் யெல்ஸ்ரின் சர்வாதிகார ஆட்சி ஏற்படாமல் தடுத்தது போல நீங்களும் தடுக்க ஏதாவது திட்டமிருக்கிறதா என்று கேட்டபோது அவர்களிடம் பதில் இருக்கவில்லை. பொறிஸ்யெல்ஸ்ரினின் வேலைத்திட்டம் போல பொங்குதமிழை மாற்றி புதுமை பெற செய்ய தங்களால் முடியாத நிலை இருப்பதாகவும், அதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்கள். அவர்கள் அதைப் புரிந்திருந்தால் புதுமாத்தளன் வந்திருக்காது, ஈழப் பிரச்சனை என்றோ முடிந்திருக்கும். ஆயுதங்களால் செய்ய முடியாததை தமிழ் உணர்வால் செய்யலாம் என்பதை இன்றுவரை நாம் புரியவில்லை.

இதுபோல செம்மொழி மாநாட்டின் ஒன்றுபட்ட பலத்தை இணைத்து அடுத்த கட்டத்திற்குள் போவதற்கும் உரிய வேலைத்திட்டம் இருப்பதாக தெரியவில்லை. இப்படியான மநாடுகளை கூடுவதும், அவற்றை நடாத்தினோமென பட்டியலிடுவதுமல்ல நமது சாதனை. அதனால் தமிழுக்கான உறுதியான இலக்கு எட்டப்பட என்ன செய்தோம் என்று சிந்திக்க வேண்டும்.

புலம் பெயர் தமிழன் என்று ஒருவன் இருந்தான், தமிழை உலகமெல்லாம் வாழும் மொழியாக காவிச் சென்றான். உலகத்தில் ஒவ்வொரு நாடுகளில் இருந்து ஒவ்வொரு தமிழனாவது பிரதிநிதியாக இடம் பெற்றிருக்க வேண்டும். உலகத்தமிழ் பிரதிநிதிகள் என்று ஓர் உலக அரங்கு அங்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும் அதையெல்லாம் செம்மொழி மாநாட்டால் செய்ய முடியவில்லை. உலக நாடுகள் தோறும் தனித்தனி அமர்வுகளை ஏற்பாடு செய்திருக்கலாம் என்று எத்தனையோ எழுதத்துடிக்கிறது மனம். தமிழுக்காக சென்ற ஆண்டு 50.000 பேர் உயிர் கொடுத்தார்கள் அவர்களைப்பற்றி ஒருவார்த்தை இல்லாமல் முடிந்தது செம்மொழி மாநாடு என்ற கவலையும் நமக்குண்டு.

ஆனாலும் இப்படியெல்லாம் சிந்திப்பதற்கு செம்மொழி மாநாடு அடிப்படையாக அமைந்திருப்பதை மறுக்க முடியாது. அது இல்லையென்றால் இப்படியான சிந்தனைகளும் இல்லாமலே போயிருக்கும். ஆகவே பல்வேறு குறை நிறைகள் இருந்தாலும், செம்மொழி மாநாட்டை இவ்வளவு சிறப்பாக நடத்தியமைக்காக கலைஞரை பாராட்ட வேண்டியது உலகத் தமிழர் கடமையாகும். மற்றவர்கள் கலைஞர் செய்ததை செய்யவில்லை என்பதை நினைத்தால் அவரைப் பாராட்டுவதில் தப்பில்லை என்பதையும் உணரலாம்.

சென்னையில் டெண்டுல்கர்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று சென்னை வந்தார்.

சச்சின் டெண்டுல்கர் இன்று காலை விமானத்தின் மூலம் மும்பையிலிருந்து சென்னை வந்தார்.

எனினும் அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. தனிப்பட்ட விஜயமாக சச்சின் டெண்டுல்கர் சென்னை வந்ததாக கருதப்படுகிறது.

அநேகமாக விளம்பர பட ஷýட்டிங்கில் நடிப்பதற்காக சச்சின் சென்னை வந்திருப்பதாக கூறப்படுகிறது.

6.28.2010

ரஞ்சிதா வீடியோ பற்றி நித்தியானந்தா புது பேட்டி!

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார். ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் படுக்கை அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த விவகாரம் ‌‌‌தொடர்பாக நித்தியானந்தா கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளியில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய நடிகை ரஞ்சிதா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்.

இந்நிலையில் நித்தியானந்தா அளித்துள்ள பேட்டியில், ரஞ்சிதா வீடியோவால் தனக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில், நடிகையுடன் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் எனது ஆன்மிக பயணத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் உண்மை எப்போதுமே உண்மையாகவே இருக்கும். நான் பெண்களிடம் தவறாக நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் எனது ஆசிரமத்தில் 8 வயது முதல் 80 வயது வரை உள்ள பெண்கள் சீடர்களாக உள்ளனர். நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஏறத்தாழ 23 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் எனது ஆசிரமத்தில் உள்ள பெண்களிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் ஒரு பெண் கூட எனக்கு எதிராக இதுவரை புகார் செய்யவில்லை. ஒவ்வொரு நாளும் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தரிசனம் செய்து, ஆசீர்வாதம் பெற்றுச்செல்கிறார்கள். எனக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து விடுபடுவதற்கு நான் அவசரம் காட்ட மாட்டேன். 3 மாதங்களுக்கு பிறகு பக்தர்களும், பொதுமக்களும் என்னைப்பற்றிய உண்மைகளை புரிந்து கொள்வார்கள். அதன்பிறகு அவர்கள் கேள்விகள் அனைத்துக்கும் தானாகவே விடை கிடைத்து விடும். இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் அமைதி மற்றும் சமாதானத்தை நோக்கி செல்ல வேண்டும். அமைதியான உலகத்தை தேடி நாம் அனைவரும் செல்ல வேண்டும். நாமும் வாழ வேண்டும், மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும். நான் சில குறிக்கோள்களை கொண்டிருக்கிறேன். உலகம் முழுவதும் யோகா மற்றும் தியானம் மூலமாக அமைதியான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

இப்போதுள்ள நிலையில் எனது கவலை எல்லாம் ஆசிரமத்தில் உள்ளவர்கள், பக்தர்கள், தேவைகளை எதிர்நோக்கி இருப்பவர்களை பற்றியே உள்ளது. அவர்கள் மிகவும் வருத்தத்திலும், வேதனையிலும் இருப்பார்கள் என்று கருதுகிறேன். அதே நேரத்தில் ஐகோர்ட்டு உத்தரவையும் மதிக்கிறேன். எனக்கு உண்மை மீது அசையாத நம்பிக்கை உண்டு. அதே போல நீதியின் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. வாய்மையே வெல்லும். சூரியனை மேகங்களால் மறைக்கக்கூடும். ஆனால் சூரியனை மேகங்களால் சேதப்படுத்த முடியாது, என்று கூறியுள்ளார்.

6.27.2010

சென்னை திரும்பினார் ரஞ்சிதா-அனுபவத்தை புத்தகமாக எழுதுகிறார்

நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவான நடிகை ரஞ்சிதா தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தெரிகிறது. ரகசியமான இடத்தில் தங்கியிருக்கும் அவர் தலைமுடியை குட்டையாக்கி, மாடர்ன் உடையில் இருக்கிறாராம். தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி வருவதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நித்தியானந்தாவைக் கைது செய்த கர்நாடக போலீஸார், ரஞ்சிதாவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக அவரைத் தேடி வந்தனர். இதுதொடர்பாக விசாரணைக்கு வருமாறும் கூறி உத்தரவிட்டனர். ஆனால் ரஞ்சிதா இதுவரை ஆஜராகவில்லை. அமெரிக்காவுக்கு அவர் ஓடி விட்டதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால் தற்போது ரஞ்சிதா சென்னை திரும்பி ரகசியமான இடத்தில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தலைமுடியை வெட்டி பாப் கட் செய்து, ஜீன்ஸ் டீசர்ட் சகிதம் அவர் காணப்படுகிறாராம். தனது அனுபவங்களை அவர் புத்தகமாக எழுதி வருகிறாராம்.

இதுகுறித்து அவர் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

சாமியார் நித்யானந்தா சம்பந்தமாக கடந்த 6 மாதத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதனால் ஏற்பட்ட அவலங்கள், எனது மனதில் ஏற்படுத்திய காயங்கள் ஆகியவற்றை விவரித்து நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன்.

இந்த புத்தகம் தனிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். இந்த புத்தகங்களை வெளியிட சில பதிப்பகங்களுடன் நான் பேசி வருகிறேன்.

இதுதவிர நான் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு நாவலும் எழுதுகிறேன். இதில் எனது அனுபவம் பற்றி எழுதும் புத்தகம்தான் முதலில் வெளிவரும்.

எனது அறையில் ஒரு யோகியின் சுயசரிதை புத்தகம், மததலைவர் ஒருவருடைய ஆன்மீக புத்தகம் ஆகியவற்றை எப்போதும் வைத்துள்ளேன்.

நான் எப்போதுமே ஒரு புத்தக புழு. எந்த நாவல்களையும் விரும்பி படிப்பேன். இப்போது தத்துவ புத்தகங்களுக்கு மாறிவிட்டேன். குறிப்பாக இந்திய ஆன்மீக புத்தகங்களை விரும்பி படிப்பேன்.

நான் தலைமறைவான விஷயங்கள் குறித்தோ அல்லது கடந்த கால சம்பவங்கள் குறித்தோ பேச விரும்பவில்லை. கடந்த காலத்தை நினைத்து கொண்டிருக்க முடியாது. அதை விட்டு வெளியே வர விரும்புகிறேன்.

மன அழுத்தம், கஷ்டங்கள் என நான் மிகவும் காயப்பட்டு விட்டேன். அதை விட்டு புதிய வாழ்க்கையை நோக்கி செல்ல விரும்புகிறேன். எனக்கு எதிராக பல செய்திகள் பரப்பப்பட்டு விட்டன. நான் கொடுத்த பேட்டியையும் திரித்து வெளியிட்டு விட்டார்கள். இவை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன்.

நடிகை என்றால் இது போன்ற கஷ்டங்களை தாங்கி கொள்வார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். என் கணவர், சகோதரிகள், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருந்து என் கஷ்டங்களை தாங்க வைத்து விட்டனர்.

நான் நடித்த ராவணன் படத்தை இன்னும் பார்க்கவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றியும் சிந்திக்கவில்லை. சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுக்க விரும்புகிறேன். நடிக்காத நேரங்களில் நான் மற்ற ராணுவ வீரர்கள் மனைவிகள் போல சமூக சேவையில் ஈடுபடுவேன்.

நான் சமீப காலங்களில் முக்கிய நபர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நான் சகஜ நிலைக்கு திரும்ப சிறிது காலம் ஆகும் என நினைக்கிறேன். என் காலடியை முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்து வைக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ரஞ்சிதா.

ரஞ்சிதா சென்னை திரும்பி விட்டதாக கூறப்பட்டாலும் கூட அது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை. அதேசமயம் அவரைப் பிடித்து விசாரிக்க கர்நாடக போலீஸாரும் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கிறார்களாம்.

த‌மிழ‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌மி‌‌ழி‌ல் கையெழு‌த்‌திட வே‌ண்டு‌ம்'

த‌மிழ‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌மி‌‌ழி‌ல் கையெழு‌த்‌திட வே‌ண்டு‌ம்'' எ‌ன்று உல‌க‌த் த‌மி‌ழ் செ‌ம்மொ‌ழி மாநா‌ட்டி‌ல் வ‌லியுறு‌த்த‌ப்ப‌ட்டது.

கொடி‌சியா வளாக‌த்‌தி‌ல் நடைபெ‌ற்று வரும் உலக‌த் த‌மி‌ழ் செ‌ம்மொ‌ழி மாநா‌ட்டி‌ல் 5வது நா‌ள் ‌‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌திரு‌க்குவளை சகோத‌ரிக‌ளி‌ன் ம‌ங்கள இசையுட‌ன் தொட‌ங்‌கியது.

'தொட‌ர்‌ந்து ‌வி‌த்தாக ‌விள‌ங்கு‌ம் மொ‌‌ழி' எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் நடைபெ‌ற்ற கரு‌த்தர‌ங்கை தொட‌‌ங்‌கி வை‌த்து பே‌சிய சுப.‌வீரபா‌ண்டிய‌ன், த‌மி‌‌ழ் மொ‌ழியை வள‌ர்‌‌க்கு‌ம் பொறு‌ப்பு அரசு, கட‌்‌சி அமை‌ப்புக‌ள், அ‌றிஞ‌ர்க‌ள், ஊடக‌ங்க‌ள், ம‌க்க‌ள் என ஐ‌ந்து தர‌ப்‌பினரு‌‌க்கு‌ம் உ‌ள்ளது எ‌ன்றா‌ர்.

செ‌ம்மொ‌ழி மாநா‌ட்டி‌ன் வெ‌ற்‌றியை கு‌றி‌க்கு‌ம் வகை‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌மி‌‌‌ழி‌ல் கையெழு‌த்‌திட வே‌ண்டு‌ம் எ‌ன்று அவ‌ர் வ‌‌‌லியுறு‌த்‌தினா‌ர்.

நடிக‌ர் சிவகுமா‌ர் மாநா‌ட்டு தலைமையுரை ஆ‌ற்‌றினா‌ர். ஜெகத்க‌ஸ்ப‌ர், ப‌ர்‌‌வீ‌ன் சு‌ல்தானா, வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ராம‌லி‌ங்க‌ம், அரு‌ள்மொ‌ழி ஆ‌கியோ‌ரு‌ம் த‌மி‌ழ் மொ‌ழி‌யி‌ன் ‌சிற‌ப்பை எடு‌த்துரை‌த்தன‌ர்.

க‌ம்ப‌ம் செ‌ல்வே‌ந்‌திர‌ன், ‌திரு‌ச்‌சி செ‌ல்வே‌ந்‌திர‌ன் ஆ‌கியோரு‌ம் த‌மி‌ழ் மொ‌ழி‌யி‌ன் ‌சிற‌ப்பை வெ‌ளி‌ப்படு‌த்‌தின‌ர். த‌மிழ‌ர்க‌ள் ‌பிற மொ‌ழியையு‌ம் ந‌ட்புட‌ன் பா‌ர்‌ப்பதாக செ‌ல்வே‌ந்‌திர‌ன் கு‌றி‌ப்‌பி‌‌ட்டா‌‌ர்.

முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன், ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் மு.க.அழ‌கி‌ரி ஆ‌கியோ‌ர் கரு‌த்தர‌ங்கை பா‌ர்‌த்து ர‌சி‌த்தன‌ர்.

மாநா‌ட்டி‌ன் ‌நிறைவு நா‌ள் ‌நிக‌ழ்‌ச்‌சியை காண ஏராளமானவ‌ர்க‌ள் கு‌வி‌‌ந்து இரு‌ப்பதா‌ல் கோவை நகரமே ‌விழா‌க்கோல‌ம் பூ‌ண்டு‌ள்ளது.

6.25.2010

83 வயது தந்தையை கவாநிக்கத மகன் சிறையில் அடைப்பு

83 வயது தந்தையின் பராமரிப்பு செலவுகளுக்கு பணம் கொடுக்காமல் அவரை தவிக்கவிட்டதாக அவரது மகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை அயனாவரத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

சென்னை படாளம் டிம்ளஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (83). இவருக்கு குமார், சேகர், கமலக்கண்ணன் ஆகிய மகன்களும், பத்மினி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இவர்களில், சேகர், கமலக்கண்ணன் ஆகியோர் மட்டும் முத்துகிருஷ்ணனுக்கு உணவு உள்ளிட்ட செலவுகளுறுக்கு பணம் வழங்கி வருகின்றனராம். இதே பகுதியில் வேறு வீட்டில் வசிக்கும் மூத்த மகன் குமார் தந்தையின் உணவு செலவுக்கு பணம் அளிக்க மறுத்து வந்தாராம்.

பணம் கேட்டு குமாரிடம் பலமுறை முத்துகிருஷ்ணன் முறையிட்டாராம். ஆனாலும், அவரிடம் இருந்து எவ்வித உதவியும் கிடைக்கவில்லையாம்.

இந்நிலையில் குமார் மீது முத்துகிருஷ்ணன் அயனாவரம் காவல் நிலையத்தில் கடந்த 23ஆம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்புக்கான சட்டம் 2007ன்படி வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மூத்த குடிமக்கள் பாதுகாப்புக்காக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் சென்னையில் நடைபெற்றுள்ள முதலாவது கைது இது என்பது குறிப்பிடத்தக்கது.

6.24.2010

மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய “அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.’

கோவையில் நேற்று துவங்கிய தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் பற்றியும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்காதது பற்றியும் விமர்சித்து திடீரென பரப்பப்பட்ட “எஸ்.எம்.எஸ்’ தகவல் பரபரப்பு ஏற்படுத்தியது.
செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாடீல் மற்றும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பின்லாந்து நாட்டில் இருந்து பங்கேற்ற அஸ்கோ பார்போலா ஆகியோருக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினர். இவர்கள் அனைவரும் “வணக்கம்’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் தமிழில் சொல்லத் தவறவில்லை.

துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே ஆங்கில கலப்பில்லாமல் பேசினார். முதல்வர் கருணாநிதி உட்பட மீதமுள்ள அனைவரின் உரையிலும் ஆங்கிலம் இடம் பெற்றிருந்தது, தமிழ் ஆர்வலர்கள், கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆங்கிலத்தில் பேசியவர்களின் உரையை தமிழில் மொழி பெயர்க்கக் கூட எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படாததால், மாநாட்டின் உரையை கேட்க வந்திருந்த பாமர மக்கள் மேடையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழித்தனர். அவ்வப்போது கூச்சல் எழுப்பி அதிருப்தியை தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை, பார்லிமெண்ட் என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் வரிகளை சொல்வதோடு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கி தமிழுக்கு பெருமை தேடி தரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டின் எந்த நிகழ்விலும் இடம் பெறவில்லை.

நேற்றைய மேடையில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தைக் கண்டு அதிருப்தி அடைந்த பொதுமக்களுக்கு, அப்துல் கலாம் பற்றிய நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. அனைவரும் இது பற்றி சிந்தித்தபடி மாநாட்டு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருக்கும் போது, அதே கருத்தை மையமாக வைத்து பரப்பப்பட்ட ஒரு எஸ்.எம்.எஸ்., கூட்டத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த எஸ்.எம்.எஸ். தகவலில், “தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு விருந்தினர்கள் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர். ஆனால் நன்கு தமிழ் தெரிந்த நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சிறப்பு விருந்தினர்கள் பெயர் பட்டியலில் இல்லை. தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இதை நினைத்துப் பார்க்க வேண்டும். இது நம் போன்ற மாணவர்களின் கவுரவ பிரச்னை’ என அந்த மெசேஜில் கூறப்பட்டிருந்தது.

தமிழில் வாதாட அனுமதிக்க கோரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும், ஆங்கில மொழியாக்க தொழில்நுட்பத்தை செயல்படுத்த உத்தரவிடவேண்டும் என்று கோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள அகில இந்திய இளநிலை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌‌ட்டு‌ள்ள பொதுநல மனு‌வி‌ல், ‌பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் ‌நீ‌திம‌ன்ற‌ங்களில் பிராந்திய மொழியான இந்தியில் வாதாடப்பட்டு வருகிறது.

தமிழ் மொழி மூலம் பாட வகுப்பு நடத்தும் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌ம், மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையிலும் உள்ள ஆவணங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் மொழி பெயர்ப்புக்காக ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல் உள்ள குமாஸ்தாக்களின் உதவியை நாட வேண்டி உள்ளது.

தங்கள் மனதில் உள்ள வாதத்தை தமிழ் மொழியில் முன்வைக்க அவர்களால் இயலவில்லை. சட்டப்பிரிவு 348-ன் படி குடியரசு‌த் தலைவ‌ரின் ஒப்புதலைப் பெற்று மாநில ஆளுநர், பிராந்திய ‌நீ‌திம‌ன்ற‌ங்களில் பிராந்திய மொழிகளில் வாதாட அனுமதி அளிக்க அதிகாரம் உள்ளது.

தமிழ்நாட்டில் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல் தமிழில் வாதாட அனுமதி கோரி போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை நிலுவையில் உள்ளது. வக்கீல்கள் தமிழில் வழக்காட அனுமதிக்கும்படி தமிழக முதலமைச்சரும் உள்துறை அமைச்சகத்தை கோரியுள்ளார்.

அரசியலமைப்பு சட்டம் 14ன் அடிப்படையில் வழ‌க்க‌றிஞ‌ர்கள் தாய்மொழியில் வாதாட சில மாநில ‌நீ‌திம‌ன்ற‌ங்களில் அனுமதி அளிக்கப்பட்டது போல் அனைத்து மாநில உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ங்களிலும் இதே நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும். ஐ.நா.சபையில் பிராந்திய மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாய்மொழியில் பேசும் போது மொழி பெயர்ப்பாளர் மூலம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இதேபோல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளும் பிராந்திய மொழியில் நடைபெறும் வாதங்களை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பாளர் மூலம் மொழியாக்கம் செய்து கொள்ளும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌திலு‌ம், மாநில உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தமிழில் வழக்காடும் உரிமை கோரும் தமிழக வழ‌க்க‌றிஞ‌ர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எ‌ன்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இ‌ந்த மனு‌வி‌ல் மத்திய உள்துறை செயலர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலர், மத்திய சட்டத்துறை செயலர், இந்திய வழக்கறிஞர் சங்க தலைவர், தமிழக அரசின் தலைமைச் செயலர், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

செம்மொழி மாநாட்டுக்காக ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கூடாது:சுப்பிரமணிய சாமி வழக்கு

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அவரது மனுவில் கூறியிருப்பதாவது:

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500 ஆயுள் தண்டனை கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்பாகவே விடுதலை செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு 1,405 ஆயுள் தண்டனை கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்னதாகவே சிறையில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில் முடிவு ஏற்படாத நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தினால், அது நீதிமன்ற அவமதிப்பு செயலாக அமையும்.

எனவே, தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

6.22.2010

செம்மொழி அந்தஸ்து தமிழ் மொழிக்கு எப்படிக் கிடைத்தது!

கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. தமிழுக்கு நல்ல செறிவான தொன்மையான இலக்கியமும், இலக்கண பாரம்பரியமும், தனக்கென தனி எழுத்து கட்டமைப்பும், எந்த இடைவெளியும் இல்லாத தொடர்ந்த செழுமையான வளர்ச்சியும் கொண்டது தமிழ் மொழி. தமிழ்நாட்டில் முதன்மையாகவும், மற்ற நாடுகளிலும் தொடர்ந்து கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் பேசப்பட்டு வளர்ந்து வருகிறது. தமிழ் மொழி இக்காலத்திற்கேற்ப தன்னை வளர்த்துக் கொண்டாலும், அதன் தொன்மைத் தன்மையும், மொழி அம்சங்களும் மாறாமல் கட்டிக் காக்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் நிர்வாகம் வேறு மொழிகளைச் செம்மொழிகளாக அறிவித்து, அவற்றின் வளர்ச்சிக்கு சிறப்பான உதவிகளைச் செய்து வந்தது. இதன் அடிப்படையில் தூண்டப்பட்டு தமிழ் நாட்டிலிருந்தும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கேட்கப்பட்டு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. வெளிநாட்டில் வாழும் தமிழ் அறிஞர்களும் இந்த வேண்டுகோளினை ஆய்வுப் பூர்வமான ஆதாரத்துடன் பரிந்துரைத்து கேட்டு வந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜார்ஜ் எல் ஹார்ட் என்னும் தமிழ் அறிஞராவார். 2000 ஆம் ஆண்டில் இது குறித்து எழுதியபோது, அப்போது செம்மொழிகள் என உலகம் எங்கும் பேசப்பட்டு வந்த பெர்சியன், சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன், சீனம் மற்றும் அரபி மொழிகளுக்கு ஈடாகவும் இணையாகவும் தொன்மையையும், இலக்கண இலக்கியத்தையும் தமிழ் கொண்டிருப்பதனாலேயே, இதற்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை வலியுறுத்தினார்.

இவருக்கு முன் இதே கருத்தினை கால்டுவெல் (1814-1891) பரிதிமாற் கலைஞர் வி.ஜி. சூர்யநாராயண சாஸ்திரி, மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோரும் வலியுறுத்திப் போராடி வந்தனர்.
இயக்கமாக சைவ சித்தாந்த சமாஜம் 1918ல் இந்த கோரிக்கையை வைத்தது. பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கரந்தை தமிழ்ச் சங்கம் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு இதே வேண்டுகோளை வைத்தது.
பின்னர் 1996 ஆம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டுமென்று கேட்டு தீர்மானம் இயற்றப்பட்டது. இதுவே 1996 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்தது. விழுப்புரத்தில் பின்னர் 2004ல் நடந்த மாநாட்டிலும் இதே தீர்மானம் வலியுறுத்தப்பட்டது.

பின் 2004ல் நடைபெற்ற பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதியாய் இருந்த தமிழர் அப்துல் கலாம், தமிழ் ஒரு செம்மொழி என அறிவித்தார். 2004 செப்டம்பரில், செம்மொழி அந்தஸ்து ஒரு மொழிக்கு வழங்கத் தேவையான அம்சங்களை மத்திய அரசின் குழு வரையறை செய்தது. பின் 2004 அக்டோபர் 12ல் இந்திய அரசு தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கி அறிவிப்பு வெளியிட்டது. சுதந்திர, இந்திய மக்கள் அரசில் முதல் செம்மொழி அறிவிப்பு பெற்ற மொழி தமிழ் மொழியே. நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்களால் வேண்டப்பட்ட ஒரு கனவு இதன் மூலம் நிறைவேறியது.

கிரேக்கம், லத்தின் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் செம்மொழிகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் மக்களால் பேசப்பட்டு உயிருடன் வாழும் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழி தமிழ் மொழி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

6.21.2010

காதலர்களை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்

அரியானாவில் குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றுவது என்ற பெயரில், இளம் காதலர்களை பெண் வீட்டார் அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டனர்.அரியானாவில் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது கிராமங்களில் குற்றமாக கருதப்படுகிறது. இதுபோன்ற திருமணங்களுக்கு கிராம பஞ்சாயத்துக்களில் கடும் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட காதலர்களின் வீட்டாரே காதலர்களை கொல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின் றன.அரியானாவில் இதேபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. அரியானா மாநிலம் பிவானி அருகே ட்ரோபவுட் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் மோனிகா (18). அருகே உள்ள மேன்ஹரு என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ரிங்கு (19). இருவரும் ஜாட் இனத்தின் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு இருவரின் குடும்பங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதையும் மீறி காதலர்களின் சந்திப்பு தொடர்ந்தது.இந்நிலையில், மோனிகாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ரகசியமாக சந்திக்க வந்த ரிங்குவை மோனிகாவின் வீட்டார் பிடித்தனர். பின்னர், மோனிகாவின் வீட்டில் வைத்து இருவரையும் அடித்தே கொன்றனர். உடல்களை வீட்டிலேயே தூக்கில் தொங்க விட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி பிரேம் சிங் கூறுகையில், ÔÔபிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். கொல்லப்பட்ட இருவரது உடல்களிலும் பலத்த காயங்கள் உள்ளன. மோனிகாவின் தந்தை, சகோதாரர், ஒன்று விட்ட சகோதரர்கள், மாமா ஆகியோர் இந்தக் கொலைகளை செய்துள்ளதாக தெரிகிறது. ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த காதலர்களுக்கு இதுதான் கதி என்பதை உணர்த்துவதற்காக வீட்டில் உடல்களை தூக்கில் தொங்க விட்டுள்ளனர். தலைமறைவான அவர்களை பிடிக்க போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.